மன்னாரில் இசாலினியின் மரணத்திற்கு நீதி கோரியும், சிறுவர் துஸ்பிரயோகங்களை கண்டித்தும் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு.
இதன் போது மன்னார் மெசிடோ நிறுவனத்தின் தலைவர் ஜாட்சன் பிகிராடோ, சட்டத்தரணி,பெண்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் ,மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறிப்பாக வித்தியாவை அடுத்து இசாலினியா?,சிறுவர் பெண்கள் உரிமைகளுக்கு மதிப்பளித்து பாதுகாப்போம்,பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு விரைவாக நீதி வழங்குங்கள்,பெண்கள்,சிறுவர்களுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகத்தை தடுப்போம்,உள்ளிட்ட பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று வியாழக்கிழமை காலை 9.30 மணி முதல் 11 மணி வரை குறித்த கவனயீர்ப்பு போராட்டம் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் இசாலினியின் மரணத்திற்கு நீதி கோரியும், சிறுவர் துஸ்பிரயோகங்களை கண்டித்தும் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு.
Reviewed by Author
on
July 22, 2021
Rating:
No comments:
Post a Comment