அண்மைய செய்திகள்

recent
-

நவகமுவயில் 150 அடி ஆழமுள்ள கற்குழிக்குள் வீழ்ந்து இருவர் உயிரிழப்பு

நவகமுவயில் சுமார் 150 அடி ஆழமுள்ள கற்குழிக்குள் வீழ்ந்து இருவர் உயிரிழந்துள்ளனர். கற்குவாரியில் பணிபுரியும் 41 மற்றும் 42 வயதான இருவரே உயிரிழந்துள்ளனர். சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

 இதேவேளை, மத்துகம கெலின்கந்த பகுதியில் மாக்கெலிய எல்ல நீர்த்தேக்கத்தில் வீழ்ந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பேருவளை பகுதியை சேர்ந்த 19 வயதான இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த இளைஞர், மேலும் ஐவருடன் மாக்கெலிய எல்ல நீர்த்தேக்கத்திற்கு குளிக்கச் சென்ற போதே அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் கூறினர்.

நவகமுவயில் 150 அடி ஆழமுள்ள கற்குழிக்குள் வீழ்ந்து இருவர் உயிரிழப்பு Reviewed by Author on July 09, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.