மன்னார் கோவில் மோட்டை விவசாயிகள் பாராளுமன்ற வளாகத்திற்கு முன் கவனயீர்ப்பு போராட்டம்
13 ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் மாகாணசபைகளுக்கு உரிய காணி அதிகாரம் இருக்கையில், அதன் பிரகாரம் தாம் தங்களுடடைய வாழ்வாதார விடயங்களை மையப்படுத்திய விவசாய நடவடிக்கைகளை குறித்த காணியில் முன்னெடுத்து வந்துள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தெரிவித்தனர்.
மன்னாரில் புதிதாக மத அரசியல் செய்யாதீர். 85 வீதம் கிறிஸ்தவர்கள் இருக்கும் கோயில் மோட்டை விவசாயிகளின் பிரச்சினையை மத பிரச்சினையாக மாற்றாதே,உங்களால் ஒழுங்கமைக்கப்பட்ட கேலிக்கூத்து போராட்டங்கள் முடிவுக்கு வரும் வரை, காணிக்கான எங்களின் போராட்டம் உயிர் மூச்சு வரை தொடரும். போன்ற பதாகைகளை குறித்து போராட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் அதே இடத்தில் இந்த மாதம் (அக்டோபர்) கடந்த 06-ஆம் திகதி மேற்குறிப்பிட்ட கோரிக்கைகளை முன்வைத்து குறித்த கோயில் மோட்டை விவசாயிகள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
மன்னார் கோவில் மோட்டை விவசாயிகள் பாராளுமன்ற வளாகத்திற்கு முன் கவனயீர்ப்பு போராட்டம்
Reviewed by Author
on
October 21, 2021
Rating:

No comments:
Post a Comment