அண்மைய செய்திகள்

recent
-

பகுதி நேர வகுப்பிற்கு சென்று விட்டு தந்தையுடன் திரும்பிக்கொண்டிருக்கையில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மாணவன் - குளியாப்பிட்டியவில் சம்பவம்

குளியாப்பிட்டிய - பரனகம விலபொல பகுதியில் தந்தை மற்றும் மகன் நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போன நிலையில் தந்தை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் மகனின் உடல் கிடைக்க வில்லை என்றும் பொலிஸார் தெரிவித் துள்ளனர். இம்முறை புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவன் பகுதி நேர வகுப்பில் கலந்துகொண்டு பின்னர் தந்தையுடன் வீடு திரும்பும் போது பரனகம ஓயா வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 தனது மகனும் கணவரும் வீடு திரும்பவில்லை என மனைவி பொலிஸில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் குளியாப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த போது இன்று காலை தந்தையின் சடலம் மிதந்த போது கண்டுபிடித்துள்ளனர். குறித்த பிரதேச மக்கள் படகுகள் மூலம் சிறுவனைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், சிறுவன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். 11 வயது மகனே காணாமல் போயுள்ளமை தெரிய வந்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


பகுதி நேர வகுப்பிற்கு சென்று விட்டு தந்தையுடன் திரும்பிக்கொண்டிருக்கையில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மாணவன் - குளியாப்பிட்டியவில் சம்பவம் Reviewed by Author on November 10, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.