தலைமன்னாரில் இந்திய மீனவர்கள் 12 பேருக்கு விளக்கமறியல்
இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இராமேஸ்வரம்,மண்டபம், தங்கச்சிமடம் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்களே மேற்படி கைது செய்யப்பட்டு மன்னார் நீரியல் வள திணைக்களத்தினரிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டனர்
குறித்த மீனவர்கள் மேலதிக விசாரணையின் பின்னர் இன்றையதினம் திங்கட்கிழமை(20) மன்னார் நீதவான் நீதிமன்ற நீதிபதி பெருமாள் சிவகுமார் முன்னிலையில் ஆஜர்படுத்திய நிலையில் வரும் ஜனவரி மாதம் 3 திகதி வரை 12 மீனவர்களையும் விளக்கமறியளில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்
பன்னிரெண்டு மீன்வர்களில் ஒரு மீனவர் திடீர் சுகயீனம் காரணமாக மன்னார் பொதுவைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது
தலைமன்னாரில் இந்திய மீனவர்கள் 12 பேருக்கு விளக்கமறியல்
Reviewed by Author
on
December 20, 2021
Rating:
No comments:
Post a Comment