மகாவலி கங்கையில் குதித்த ஜோடிகளில் காணாமல் போயிருந்த யுவதியின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
அதன் பின்னர், இந்த சடலம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிசிக்க அவர் நடவடிக்கை எடுத்துள்ளாா். அதன் பின்னர் யுவதியின் சடலம் அவரின் தாய் மற்றும் உறவினர்களால் அடையாளங்காணப்பட்டுள்ளது.
கடந்த 16ஆம் திகதி மாலை 4.30 மணியளவில் மஹியங்கனை,கண்டி வீதியில் மஹியங்கனை மகாவலி கங்கை பாலத்திலிருந்த இளஞ் ஜோடி ஆற்றில் வீழ்ந்திருந்தனா். இளைஞன் தப்பியிருந்ததுடன் குறித்த யுவதி காணாமல் போயிருந்தாா்.
அதன் பின்னர் சம்பந்தப்பட்ட இளைஞன் சிகிச்சைக்காக மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தாா்.
முதலில் குறித்த யுவதியே ஆற்றில் குதித்ததாக இந்த சம்பவத்தை நேரில் பார்த்த நபரொருவர் தெரிவித்துள்ளாா். ஆனால், இளைஞர் தப்பித்து வந்துள்ளாா்.
அதன் பின்னா் பொலிஸாா் அந்த இடத்திலிருந்து குறித்த யுவதியின் பயண பொதியொன்று மீட்கப்பட்டிருந்ததுடன் அதிலிருந்து அவர் இருவரதும் தேசிய அடையாள அட்டை கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த யுவதி ரிதிமாலியத்த, கஸ்கொல்ல பிரதேசத்தைச் சேரந்த 19 வயதுடையவர். இளைஞர் ரிதிமாலியத்த, யல்அராவ, ஹெவன் வத்த பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடையவர்.
இவர்கள் இருவருக்கும் இடையில் இரண்டு வருடங்களாக காதல் தொடர்பு இருந்ததாக யுவதியின் தாயாா் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளாா்.
குறித்த இளைஞன் இன்னுமொரு காதல் தொடர்பை வைத்திருந்தமை உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து யுவதி சில மாதங்களுக்கு முன்னர் இருவரின் மத்தியிலும் இரந்த காதல் தொடர்பை நிறுத்தியிருந்ததாகவும் தாயார் தெரிவித்துள்ளாா்.
உயிரிழந்த யுவதி குடும்பத்தில் இரண்டாவது குழந்தை என்பதுடன் அவருக்கு 24 வயதுடைய சகோதரர் ஒருவரும் 07 வயதுடைய சகோதரரும் இருப்பதாக விசாரணைகளில தெரியவந்துள்ளார்
மகாவலி கங்கையில் குதித்த ஜோடிகளில் காணாமல் போயிருந்த யுவதியின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
Reviewed by Author
on
December 20, 2021
Rating:
No comments:
Post a Comment