இறக்குமதி செய்யப்பட்டுள்ள லிட்ரோ எரிவாயு சிலிண்டரில் தேவையான அளவில் எதைல் மெர்காப்டன் இல்லை
லிட்ரோ எரிவாயு நிறுவனத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட எல்பி எரிவாயு சிலிண்டர்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ள நிலையில், அதிலுள்ள எதைல் மெர்காப்டன் (ethyl mercaptan) தேவையான மட்டத்தில் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். துறைமுகத்தில் எல்பி எரிவாயுவை இறக்குவதற்கு அனுமதிப்பது குறித்து நாளடைவில் தீர்மானிக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
குறித்த கப்பலில் இருந்து பெறப்பட்ட மாதிரிகள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சோதனை செய்யப்பட்டன.
புரொப்பேன் மற்றும் பியூட்டேன் ஆகியவற்றின் கலவை தரத்தைப் பூர்த்தி செய்திருந்தாலும், சிலிண்டர்களிலுள்ள எதைல் மெர்காப்டனின் அளவு தொடர்பில் கவனம் செலுத்துவதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
இறக்குமதி செய்யப்பட்டுள்ள லிட்ரோ எரிவாயு சிலிண்டரில் தேவையான அளவில் எதைல் மெர்காப்டன் இல்லை
Reviewed by Author
on
December 14, 2021
Rating:
No comments:
Post a Comment