திருமலையில் கடலில் மூழ்கி பாடசாலை மாணவர்கள் இருவர் பரிதாபப் பலி!
இதையடுத்து, நீரில் மூழ்கிய சிறுவர்களைக் கடலில் தேடியபோது அவர்கள் உயிரிழந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
தரம் 09 இல் கல்வி கற்கும் 14 வயதுடைய யோகேந்திர ராசா லக்சன் வயது, தரம் 06 இல் கல்வி கற்கும் 12 வயதுடைய டினேஸ்காந்த் நிம்ரோசன் ஆகியோரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த இரண்டு சிறுவர்களின் சடலங்களும் ஈச்சிலம்பற்று வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த நிலையில், ஈச்சிலம்பற்று பொலிஸாரும், திடீர் மரண விசாரணை அதிகாரி ஆகியோர் பார்வையிட்டனர். அதன்பின்னர் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்குச் சடலங்கள் அனுப்பப்பட்டன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
திருமலையில் கடலில் மூழ்கி பாடசாலை மாணவர்கள் இருவர் பரிதாபப் பலி!
Reviewed by Author
on
December 04, 2021
Rating:
No comments:
Post a Comment