அண்மைய செய்திகள்

recent
-

பால்மாவுக்கான தட்டுப்பாடு இந்த மாத இறுதி வரையில் தொடரும்- இறக்குமதியாளர்கள் சங்கம்

பால்மாவுக்கான தட்டுப்பாடு இந்த மாத இறுதி வரையில் தொடரும் என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கத்தின் பேச்சாளர் அஷோக பண்டார தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பாக அஷோக பண்டார மேலும் கூறியுள்ளதாவது, “பால்மா ஏற்றிய கப்பல்கள் இந்த மாத இறுதியிலோ அல்லது பெப்ரவரி மாதத்தின் முற்பகுதியிலோ பால்மா வர இருக்கின்றது. 

 மேலும் டொலர் தட்டுப்பாடு காரணமாகவே கடந்த 31 ஆம் திகதி முதல் பால்மா விலையினை அதிகரிப்பதற்கு அதன் இறக்குமதியாளர்கள் தீர்மானித்தனர். அந்தவகையில் இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் பால்மா பொதியின் விலை 150 ரூபாயிலும் 400 கிராம் பால்மா பொதியின் விலை 60 ரூபாயிலும் அதிகரிக்கப்பட்டன” என அவர் குறிப்பிட்டுள்ளார். ஒரு கிலோ கிராம் பால்மா பொதி 1,345 ரூபாயிற்கும் 400 கிராம் பால்மா பொதி 540 ரூபாயிற்கும் விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

பால்மாவுக்கான தட்டுப்பாடு இந்த மாத இறுதி வரையில் தொடரும்- இறக்குமதியாளர்கள் சங்கம் Reviewed by Author on January 06, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.