அண்மைய செய்திகள்

recent
-

வவுனியாவில் கடும் மழை; உழுந்து செய்கையாளர்கள் பாதிப்பு

வவுனியாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக உழுந்து செய்கையாளர்கள் பாதிப்படைந்துள்ளனர். இலங்கையில் அதிக உழுந்து உற்பத்தி மாவட் டங்களில் ஒன்றான வவுனியா மாவட்டத்தில் உழுந்து அறுவடை தற்போது இடம்பெற்று வருகின்றது. தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக வவுனியாவில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் மழையினால் பலர் உழுந்து அறுவடையை மேற்கொள்ள முடியாமல் உள்ளனர்.

 பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் விதைத்து 3 மாதங்களாகக் காத்திருந்து, அறு வடைக்குத் தயாரான உழுந்துப் பயிர்கள் மழை காரணமாக பாதிப்படைந்து வருகின்றன. இதனால் பலரும் அறுவடையை மேற்கொள்ள முடியாத நிலைக் குத் தள்ளப்பட்டுள்ளனர்.





வவுனியாவில் கடும் மழை; உழுந்து செய்கையாளர்கள் பாதிப்பு Reviewed by Author on February 14, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.