அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரிலும் 'ஒரு லட்சம் அபிவிருத்தித் திட்டங்கள்' வேலைத்திட்டம் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைப்பு.

2022 ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் விசேட நிதி ஒதுக்கீட்டில் கிராம மட்டத்தில் ஒரு லட்சம் பணிகளை நடை முறைப்படுத்தும் விசேட செயற்திட்டம் மன்னார் பிரதேச செயலாளர் ம.பிரதீப் தலைமையில் இன்று(03) வியாழக்கிழமை காலை 8.45 மணியளவில் கீரி கிராமத்தில் வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது 

 பட்டித்தோட்டம் கிராம சேவையாளர் பிரிவில் உள்ள மக்களின் சுகாதார நிலைமையை கருத்தில் கொண்டு கீரி கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையை அமைக்கும் செயற்திட்டத்திற்கான அடிக்கல் இன்றைய தினம் மேற்படி செயற்திட்டத்தினூடாக ஆரம்பிக்கப்பட்டது அதன் அடிப்படையில் ஆறு லட்சம் ரூபா செலவில் குறித்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கான முதற்கட்ட பணிகள் ஆரம்பிக்கப்பட்டது குறித்த நிகழ்வில் மன்னார் பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர் திரு.றொகான் பட்டிதோட்டம் அபிவிருத்தி உத்தியோகஸ்தர், கிராம சேவகர் ,மாதர் ஒன்றிய உறுப்பினர்கள் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்















மன்னாரிலும் 'ஒரு லட்சம் அபிவிருத்தித் திட்டங்கள்' வேலைத்திட்டம் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைப்பு. Reviewed by Author on February 03, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.