அண்மைய செய்திகள்

recent
-

முல்லைத்தீவு பனிக்கன்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை வரலாற்றில் 47 வருடங்களுக்கு பின் வரலாற்றுச்;; சாதனை படைத்த ஊடகவியலாளரின் மகள்

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் கல்வி வலயத்திற்குட்பட்ட பனிக்கன்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை வரலாற்றில் 47 வருடங்களுக்கு பின் சாதனை படைத்துள்ளார் ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் அவர்களுடைய மகள் தவசீலன் புவனாஜினி அவர்கள் பனிக்கன்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்து பாடசாலையில் 1975 ஆண்டு மாணவி ஒருவர் மாவட்ட மட்ட வெட்டுப் புள்ளிக்கு மேல் சித்தி பெற்றிருந்தார். 

அதன் பிற்பாடு பல மாணவர்கள் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்றிருந்தாலும் கடந்த 47 வருடத்தின் பின்பு மாவட்ட வெட்டுப் புள்ளியைத் தாண்டி சிறந்த பெறுபேற்றைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார் தவசீலன் புவனாஜினி இன்று வெளியாகிய தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் அவர்களுடைய மகள் தவசீலன் புவனாஜினி அவர்கள் 162 புள்ளிகளை பெற்றுள்ளார் முல்லைத்தீவு மாவட்ட வெட்டுப்புள்ளியாக 147 அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது














முல்லைத்தீவு பனிக்கன்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை வரலாற்றில் 47 வருடங்களுக்கு பின் வரலாற்றுச்;; சாதனை படைத்த ஊடகவியலாளரின் மகள் Reviewed by Author on March 14, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.