முல்லைத்தீவில் பல்நோக்கு அபிவிருத்தி திணைக்கள உதவியாளர்கள் உத்தியோகபூர்வ இடங்களிற்கு தற்காலிகமாக இணைப்புச் செய்வதற்கான நியமனக்கடிதங்கள் வழங்கி வைப்பு!!
தேசிய தொழிற்றகமை மூன்றவது மட்டத்தினை (NVQ 3) பயிற்சிக்காலத்தில் பூர்த்தி செய்துள்ள இவர்கள் நிரந்தரமான வெற்றிடமாக உள்ள இடங்களிற்கே இவ்வாறு பயிற்சிக்கால கொடுப்பனவுகளுடன் நிரந்தர நியமனம் பெறும்வரை பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். நிரந்தர நியமன கடிதங்கள் வழங்கப்பட்டதன் பின்னரும் குறித்த அலுவலகங்களில் நிரந்தர உத்தியோகத்தர்களாக கடமையாற்றுவர்.
இதன்போது கரைதுறைபற்று பிரதேச செயலர் பிரிவில் 10 பேரும், புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவில் 09 பேரும், ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவில் 04 பேரும், துணுக்காய் பிரதேச செயலர் பிரிவில் 06 பேரும், மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவில் 04 பேரும், வெலிஓயா பிரதேச செயலர் பிரிவில் 18 பேருமாக 51 பேர் பல்வேறு அரச திணைக்கள வெற்றிடங்களுக்கு தற்காலிகமாக இணைப்புச் செய்யப்பட்டுள்ளனர்.
இந் நிகழ்வில் மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலகங்களில் பல்நோக்கு அபிவிருத்தி செயலணி கிளைகளில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள், பயிற்சியாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
முல்லைத்தீவில் பல்நோக்கு அபிவிருத்தி திணைக்கள உதவியாளர்கள் உத்தியோகபூர்வ இடங்களிற்கு தற்காலிகமாக இணைப்புச் செய்வதற்கான நியமனக்கடிதங்கள் வழங்கி வைப்பு!!
Reviewed by Author
on
April 08, 2022
Rating:
No comments:
Post a Comment