அண்மைய செய்திகள்

recent
-

ஒட்டுசுட்டான் பிரதேச இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் நீரில் மூழ்கி பலி

ஒட்டுசுட்டான் பிரதேச இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் நீரில் மூழ்கி பலி ஒட்டுசுட்டான் பிரதேச இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் நமசிவாயம் டிலக்சன் (வயது 25) நீரில் மூழ்கி பலியாகியுள்ளார் இந்த சம்பவம் இன்று மாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரதேச செயலாளர் பிரிவின் காதலியார் சம்மணங்குளம் கிராம அலுவலர் பிரிவின் ஏம்பகுளம் குளத்தில் நில அளவை திணைக்களத்தினர் நில அளவை பணியில் ஈடுபட்டுள்ளனர்

 இதன்போது நில அளவைத் திணைக்களத்தின் பணியாளராக பணிபுரிந்து வந்த வித்தியாபுரம் பகுதியை சேர்ந்த ஒட்டுசுட்டான் பிரதேச இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் நமசிவாயம் டிலக்சன் உள்ளிட்ட நான்கு பேர் நில அளவை பணியில் ஈடுபட்டுள்ளனர் இதன்போது நில அளவை பணிக்காக குளத்தில் இறங்கியபோதே குறித்த இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் சேற்றில் புதையுண்டு நீரில் மூழ்கி பலியாகியுள்ளார் கிராம மக்கள் இராணுவத்தினர் இணைந்து உடலத்தினை மீட்டு தற்போது உடலம் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது சம்பவம் தொடர்பில் ஒட்டுசுட்டான் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் குளத்தில் நில அளவு பணிக்கு பணியாளர்களை பொறுப்பற்ற தனமாக இறக்கிய அதிகாரிகள் மீது பொதுமக்கள் விசனம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

சண்முகம் தவசீலன்
2022.04.05


















ஒட்டுசுட்டான் பிரதேச இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் நீரில் மூழ்கி பலி Reviewed by Author on April 05, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.