ஒட்டுசுட்டான் பிரதேச இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் நீரில் மூழ்கி பலி
இதன்போது நில அளவைத் திணைக்களத்தின் பணியாளராக பணிபுரிந்து வந்த வித்தியாபுரம் பகுதியை சேர்ந்த ஒட்டுசுட்டான் பிரதேச இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் நமசிவாயம் டிலக்சன் உள்ளிட்ட நான்கு பேர் நில அளவை பணியில் ஈடுபட்டுள்ளனர்
இதன்போது நில அளவை பணிக்காக குளத்தில் இறங்கியபோதே குறித்த இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் சேற்றில் புதையுண்டு நீரில் மூழ்கி பலியாகியுள்ளார்
கிராம மக்கள் இராணுவத்தினர் இணைந்து உடலத்தினை மீட்டு தற்போது உடலம் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது சம்பவம் தொடர்பில் ஒட்டுசுட்டான் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
குளத்தில் நில அளவு பணிக்கு பணியாளர்களை பொறுப்பற்ற தனமாக இறக்கிய அதிகாரிகள் மீது பொதுமக்கள் விசனம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
ஒட்டுசுட்டான் பிரதேச இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் நீரில் மூழ்கி பலி
Reviewed by Author
on
April 05, 2022
Rating:
No comments:
Post a Comment