மே தினத்தை முன்னிட்டு கடலுக்கு சென்ற சிறுவர்கள் உட்பட 13 பேரை இந்தியாவிற்கு செல்வதாக கூறி கைது செய்த தலைமன்னார் கடற்படையினர்
இந்த நிலையில் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பாட்ட நபர்கள் சார்பாக சட்டத்தரணி டினேஸன் ஆஜராகிய நிலையில் கைது செய்யப்பட்ட அனைவரும் கடற்கடையை பார்வையிடவே சென்றதாகவும் கடற்படையினர் வேண்டும் என்றே அவர்களை கைது செய்ததாகவும் சமர்பணத்தை மேற்கொண்ட்டார்
இந்த நிலையில் வழக்கை விசாரித்த மன்னார் நீதிவான் நீதிமன்ற நீதிபதி A.H.ஹைபதுல்லா குறித்த 13 நபர்களையும் சட்ட வைத்திய அதிகாரியிடன் ஒப்படைத்து அறிக்கை சமர்பிக்குமாறு உத்தரவிட்டிருந்தார்
அதனை தொடர்ந்து அறிக்கையை பார்வையிட்ட பின்னர் குறித்த 10 சிறுவர்களும் பெற்றோர்களுடன் செல்ல அனுமதிக்கப்பட்டதோடு 3 நபர்களையும் பிணையில் செல்ல அனுமதி அளித்தார்.
கடந்த மாதமும் மன்னார் மாவட்டத்திற்கு சுற்றுலாவிற்கு என வருகை தந்து விடுதி ஒன்றில் தங்கியிருந்த குடும்பம் ஒன்றையும் பொலிஸார் சந்தேகத்தின் பெயரில் கைது செய்து விசாரனை மேற்கொண்டமை குறிப்பிடதக்கது
மே தினத்தை முன்னிட்டு கடலுக்கு சென்ற சிறுவர்கள் உட்பட 13 பேரை இந்தியாவிற்கு செல்வதாக கூறி கைது செய்த தலைமன்னார் கடற்படையினர்
Reviewed by Author
on
May 02, 2022
Rating:

No comments:
Post a Comment