அண்மைய செய்திகள்

recent
-

ஒரு போத்தல் பெற்றோலை 800 ரூபாவுக்கு விற்ற பெண் கைது

அளுத்கம கூட்டுறவு எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளரின் மனைவி பேருவளை கலாவில கந்தேனிவாச என்ற இடத்தில் சட்டவிரோதமான முறையில் பெற்றோலை அதிக விலைக்கு விற்பனை செய்யும் போது பெற்றோல் கையிருப்புடன் கைது செய்யப்பட்டுள்ளார். 

 பேருவளை பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு கிடைத்த இரகசியத் தகவலின் பேரில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பெண்ணிடம் நடத்திய விசாரணையில், கணவர் பணி முடிந்து வீடு திரும்பும் போது கொண்டு வரும் பெற்றோலை தான் விற்பனை செய்வதாகக் கூறியுள்ளார். பெற்றோல் போத்தல் ஒன்றை 800 ரூபாவுக்கு கொள்வனவு செய்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் வீட்டை சோதனை செய்து பெண்ணை கைது செய்ததுடன் பெற்றோல் கையிருப்பையும் பறிமுதல் செய்ததாக பேருவளை பொலிஸ் பொறுப்பதிகாரி லலித் பத்ம குமார தெரிவித்தார்.


ஒரு போத்தல் பெற்றோலை 800 ரூபாவுக்கு விற்ற பெண் கைது Reviewed by Author on May 29, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.