மீனவர்கள் மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்லஸ்தேவானதாவிற்கும் இடையில் மன்னாரில் விசேட சந்திப்பு
இவ் சந்திப்பில் மன்னார் மீனவர்கள் பெரும்பாலும் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாகவும் எரிபொருள் பிரச்சினை தொடர்பாகவும் மீனவர்களுக்கும் மீனவர்சங்கங்களுக்கும் விசேட அடிப்படையில் மண்ணென்னை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்தனர்
அதே நேரம் கச்சதீவை இந்தியாவிற்கு வழங்க கூடது எனவும் இந்திய மீனவர்களின் வருகை அண்மை நாட்களாக அதிகரித்துள்ளதாகவும் அதையும் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கோரிக்கை விடுத்தனர்
குறித்த மீனவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்துகொண்ட அமைச்சர் டக்லஸ் தேவானந்தா விரைவில் காத்திரமான முடிவுகளை பெற்றுத்தருவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாகவும் அதே நேரம் பொருளாதார சுமையை குறைக்கும் வகையில் விரைவில் இந்தியாவில் இருந்து கப்பல் சேவை ஊடாக யாழ் காங்கேசந்துறை ஊடாக அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்
அதே நேரம் குறித்த விசேட சந்திப்பில் மீனவ காப்புறுதி திட்ட பயணாளர்களுக்கு காப்புறுதி பணத்தினையும் அமைச்சர் கையளித்ததுடன் ஆள்கடல் மீன்பிடி தொடர்பாக விசேட பயிற்சி நெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதல்களையும் வழங்கிவைத்தமை குறிப்பிடதக்கதது.
மீனவர்கள் மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்லஸ்தேவானதாவிற்கும் இடையில் மன்னாரில் விசேட சந்திப்பு
Reviewed by Author
on
June 17, 2022
Rating:
No comments:
Post a Comment