காதர்மஸ்தான் MP யின் தலைமன்னார் பியர் எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர் கைது
இந்த நிலையில் அதிகாலை நூற்றுக்கணக்கான மக்கள் எரிபொருள் பெறுவதற்காக வரிசையில் நின்ற நிலையில் 400 ரூபா வீதம் 500 பேருக்கு மாத்திரமே எரிபொருள் விநியோகக்கப்படும் என எரிபொருள் நிரப்பு நிலையத்தினரால் தெரிவிக்கப்பட்ட நிலையில் அப்பகுதி மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் 1000 பேருக்கு 400 ரூபாய் வீதம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது
இந்த நிலையில் மக்கள் குடும்ப அட்டைகளிலும் பதிவுகளை மேற்கொண்டு மண்ணென்னை பெற சென்ற நிலையில் 200 நபர்களுக்கு கூட வழங்காத நிலையில் மண்ணென்னை நிறைவடைதுள்ளது
இதனால் குழப்பமடைந்த மக்கள் எரிபொருள் நிரப்பு நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர் இந்த நிலையில் எரிபொருள் தாங்கியை மக்கள் முன்னிலையில் சோதித்த நிலையில் தாங்கியிலும் மண்ணென்னை இருக்கவில்லை
இவ்வாறு இருக்க அனுப்பி வைக்கப்பட்ட 13400 லீற்றர் மண்ணென்னைய்க்கு என்ன நடந்தது என விசாரித்த நிலையில் 250 லீற்றர் அங்கு பணி புரியும் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டதாக எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர் தெரிவித்துள்ளார் ஆனாலும் தங்களுக்கு அவ்வாறு வழங்கப்படவிலை என ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்
அதன் பின்னர் எரிபொருள் வழங்கப்பட்ட பதிவுகளை சோதித்த நிலையில் இன்று அதிகாலையிலேயே பணம் படைத்த சிலருக்கு நூறுக்கு மேற்பட்ட லீற்றர்கள் வழங்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது
இந்த நிலையில் குறித்த எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர் கைது செய்யுமாறு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் முகாமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்
குறித்த தலைமன்னார் பியர் எரிபொருள் நிரப்பு நிலையம் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் காதர்மஸ்தானுடையது என்பது குறிப்பிடதக்கது
காதர்மஸ்தான் MP யின் தலைமன்னார் பியர் எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர் கைது
Reviewed by Author
on
June 17, 2022
Rating:
No comments:
Post a Comment