அண்மைய செய்திகள்

recent
-

இராணுவத்தினரால் குருந்தூர்மலையில் அமைக்கப்பட்ட விகாரையில் புத்தர் சிலை பிரதிஸ்டை! எதிர்ப்பு போராட்டம்

இராணுவத்தின் பூரண கட்டுப்பாட்டுக்குள் முல்லைத்தீவு மாவட்டத்தின் குமுளமுனை குருந்தூர்மலையில் நீதிமன்ற கட்டளைக்கு மாறாக இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட குருந்தாசோக புராதன விகாரையில் கபோக் கல்லினால் செதுக்கப்பட்ட புத்தர் சிலை பிரதிஷ்டை செய்யும் நிகழ்வும் விசேட பூசை வழிபாடுகளும் இன்று (12) நூறுக்கணக்கான பௌத்த பிக்குகளின் பங்கேற்புடனும் இராணுவம் பொலிஸ் ,விமானப்படை ,கடற்படையினரின் பங்கேற்புடனும் இடம்பெறவுள்ள நிலையில் குறித்த செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது 

 பிரதேச தமிழ் மக்களால் வழிபடப்பட்டுவந்த ஆதிசிவன் ஐய்யனார் ஆலயம் அமைந்துள்ள குருந்தூர் மலையில் இருந்த ஐயனார் ஆலயத்தின் சூலம் உடைத்து எறியப்பட்டு அதன்பின்னர் அங்கு வழிபாட்டுக்கு செல்லும் தமிழ் மக்கள் அச்சுறுத்தப்பட்டு தடைவிதிக்கப்பட்ட பின்னர் குறித்த பகுதி இராணுவ ஆக்கிரமிப்புக்குள் கொண்டுவரப்பட்டு அங்கு தொல்லியல் அகழ்வாராட்டசி பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்த அதே நேரத்தில் அங்கு பௌத்த விகாரை ஒன்றும் புராதன காலத்தை ஒத்த வடிவில் இராணுவத்தினால் அமைக்கப்பட்டுவந்தது. அத்தோடு குருந்தூர் மலையை சூழவுள்ள தமிழ் மக்களுக்கு சொந்தமான விவசாய நிலங்களில் பயிர் செய்கை நடவடிக்கைக்கு பௌத்த பிக்கு மற்றும் தொல்லியல் திணைக்களத்தினாரால் தடை விதிக்கப்பட்டத்தோடு தண்ணிமுறிப்பு கிராமத்தில் வாழ்ந்த தமிழ் மக்களுக்கு சொந்தமான 400 ஏக்கர் நிலங்களையும் பௌத்த விகாரைக்குரிய நிலமாக வழங்குமாறு கோரி பௌத்த பிக்குவால் கோரிக்கையும் முன்வக்கப்பட்டிருந்தது

 கடந்த ஆண்டு ஜனவரி 18 ஆம் திகதி குருந்தூர்மலையில் தொல்லியல் ஆய்வு பணிகளை ஆரம்பித்து வைக்கப்பட்டதையடுத்து அப்பகுதிக்கு தமிழ் மக்கள் யாரும் செல்வதற்கு இராணுவமும் தொல்லியல் திணைக்களமும் தடை ஏற்படுத்தி வந்திருந்த நிலையில் தொல்லியல் ஆய்வுப்பணிகள் இடம்பெற்றுவந்த சம நேரத்திலேயே அங்கு மிக பிரமாண்டமான முறையில் புராதன கால செங்கற்களை ஒத்த செங்கற்கள் செய்யப்பட்டு குருந்தூர் மலைக்கு கொண்டுவரப்பட்டு நூற்றுக்கணக்கான இராணுவத்தினரின் பங்கேற்புடன் இரவு பகலாக கட்டுமானம் இடம்பெற்றுவந்தது 

 இந்த நிலையில் தற்போது விகாரை அமைக்கும் வேலை முற்றுப்பெற்று விகாரையின் உச்சியில் உள்ள கலசத்தில் பூசை வழிபாடுகளை செய்யும் நிகழ்வும் புத்தர் சிலை பிரதிஸ்டை செய்யும் நிகழ்வும் இன்று இடம்பெறவுள்ள நிலையில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது குறித்த போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வராசா கஜேந்திரன் ,வினோநோகராதலிங்கம் முன்னாள் வடமாகாண சபை விவசாய அமைச்சர் கந்தையா சிவநேசன் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் பிரதேச சபை உறுப்பினர்கள் அரசியல் பிரமுகர்கள் சிவில் சமூக பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்






































இராணுவத்தினரால் குருந்தூர்மலையில் அமைக்கப்பட்ட விகாரையில் புத்தர் சிலை பிரதிஸ்டை! எதிர்ப்பு போராட்டம் Reviewed by Author on June 12, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.