எதிர்வரும் வாரங்களில் எரிபொருள் நெருக்கடி தீவிரம்..?
இதே நேரம், நாட்டில் எரிபொருள் நெருக்கடி நாளை முதல் மோசமடையுமென பெற்றோலிய தொழிற்சங்கங்கள் கருத்துக்களை முன் வைத்துள்ளன.
மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவின் புள்ளி விபரங்களின் படி இன்னும் நான்கு நாட்களுக்கு மட்டுமே நாட்டில் டீசல் கிடைக்கும் என பெற்றோலிய தொழிற்சங்க ஒருங்கிணைப்பாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.
பெற்றோல், டீசல் பற்றாக்குறை சிக்கலின் காரணமாகவே நாளை 13ஆம் திகதி அரச நிறுவனங்கள், பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டதாக கூறப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் வாரங்களில் எரிபொருள் நெருக்கடி தீவிரம்..?
Reviewed by Author
on
June 12, 2022
Rating:
No comments:
Post a Comment