அண்மைய செய்திகள்

recent
-

தேசிய கீதம் தமிழிலும் இசைக்கப்படும் – பந்துல

அடுத்த வருடம் நடைபெற உள்ள இலங்கையின் 75 வது சுதந்திர தின விழாவில் தேசிய கீதம் சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் இசைக்கப்படவுள்ளது. எதிர்வரும் சுதந்திர தின விழாவில் தமிழில் கீதம் பாடப்படுமா என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பிய போதே அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.

 2015 முதல் 2019 வரையிலான ‘நல்லாட்சி அரசாங்கத்தின்’ போது உத்தியோகபூர்வ விழாக்களில் தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 2019 இல் ஆட்சிக்கு வந்த பின்னர் தேசிய கீதத்திலிருந்து தமிழ் பதிப்பு நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.


தேசிய கீதம் தமிழிலும் இசைக்கப்படும் – பந்துல Reviewed by Author on August 16, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.