அண்மைய செய்திகள்

recent
-

இலங்கைக்கு கடத்த இருந்த ஒரு தொகுதி கடல் அட்டைகள் மீட்பு-ஒருவர் கைது.

இலங்கைக்கு கடத்துவதற்காக பிடித்து வரப்பட்ட 21 மூடைகளில் பொதி செய்யப்பட்ட சுமார் 300 கிலோ கடல் அட்டைகள் இன்று செவ்வாய்க்கிழமை (2) மாலை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் வடக்கு கடற்கரை பகுதியில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் ரோந்து சென்றபோது சந்தேகத்திற்கிடமாக நின்ற காரை சோதனை செய்தனர். இதன் போது கடத்திச் செல்ல ஆயத்தமாக இருந்த 21 சாக்கு பையில் இருந்து 300 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்தனர்.

 இது தொடர்பாக தேவி பட்டினத்தை சேர்ந்த ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் இலங்கைக்கு கடத்திச் செல்வதற்காக பிடித்து வரப்பட்டதாக கூறப்படுகிறது. ராமநாதபுரத்தில் உள்ள வனத்துறையினரிடம் கடல் அட்டைகளை ஒப்படைத்தனர் வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.








இலங்கைக்கு கடத்த இருந்த ஒரு தொகுதி கடல் அட்டைகள் மீட்பு-ஒருவர் கைது. Reviewed by Author on August 02, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.