அண்மைய செய்திகள்

recent
-

வாகன விபத்தில் சிறுவன் உட்பட 3 பேர் உயிரிழப்பு !

அநுராதபுரம், பாதெனிய – தலதாகம வீதியில் ரிதிபதியெல்ல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று வயது சிறுவன் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து இன்று (17) காலை 10 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக நாகொல்லாகம பொலிஸார் தெரிவிக்கின்றனர். அனுராதபுரத்தில் இருந்து பாதெனிய நோக்கி பயணித்த கார் ஒன்று வீதிக்கு அருகில் உள்ள மரமொன்றில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. அனுராதபுரம் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களே இவ் விபத்தில் சிக்கியுள்ளனர்.

 விபத்தில் காயமடைந்தவர்களை காரில் இருந்து வெளியே எடுக்க சுமார் 20 நிமிடங்கள் ஆனதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர். இதனையடுத்து, காயமடைந்த மூவர் வாரியபொல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது சிறுவனும் ஏனைய இருவரும் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். சம்பவத்தில் பலத்த காயமடைந்த மேலும் இருவர் மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



வாகன விபத்தில் சிறுவன் உட்பட 3 பேர் உயிரிழப்பு ! Reviewed by Author on October 17, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.