மன்னார் வொலிபோல் பிறீமியர் லீக் சுற்றுபோட்டி வைபவரீதியாக ஆரம்பித்து வைப்பு
குறித்த போட்டிகளில் கலந்து கொள்ளும் அணிவீரர்களை அறிமுகப்படுத்தும் நிகழ்வும் அவர்களுக்கான சீருடைகளை அணியின் உரிமையாளர்களை அறிமுகப்படுத்தும் ஆரம்ப நிகழ்வு மேற்படி வைபவரீதியாக ஆரம்பிக்கப்பட்டு இடம் பெற்றது
குறித்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான காதர் மஸ்தான்,வன்னி பாராளுமன்ற உறுப்பினர் விநோனோர்தலிங்கம் மன்னார் பொது பொலிஸ் அத்தியட்சகர் நாகவத்த, மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜயதிலக,மன்னார் வொலிபோல் லீக் உறுப்பினர்கள்,மன்னார் வொலிபோல் சம்மேளன உறுப்பினர்கள்,வொலிபோல் வீரர்கள்,வொலிபோல் லீக் உரிமையாளர்காள் உட்பட பலர் கலந்து கொண்டனர்
தொடர்ந்து வரும் ஆண்டுகளில் மன்னார் மாவட்டத்தில் இருந்து தேசிய வொலிபோல் அணிக்கு வீரர்களை உருவாக்கும் முகமாக குறித்த சுற்றுப்போட்டி ஆண்டு தோறும் இடம் பெறவுள்ளமை குறிப்பிடதக்கது
மன்னார் வொலிபோல் பிறீமியர் லீக் சுற்றுபோட்டி வைபவரீதியாக ஆரம்பித்து வைப்பு
Reviewed by Author
on
October 01, 2022
Rating:

No comments:
Post a Comment