அண்மைய செய்திகள்

recent
-

வரக்காபொல மண்சரிவில் சிக்கியிருந்த பெண்ணொருவரின் சடலம் மீட்பு

வரக்காபொல – தும்பிலியத்த பகுதியில் உள்ள வீடொன்றின் மீது நேற்று (வெள்ளிக்கிழமை) மண்சரிவு ஏற்பட்டதில் நால்வர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில் இன்று (சனிக்கிழமை) மண்மேடுட்டில் சிக்கியிருந்த 48 வயதுடைய பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இதேவேளை குறித்த மண் மேட்டின் சிக்கியுள்ள மூவரைக் கண்டுபிடிக்கும் தேடுதல் நடவடிக்கையை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் நேற்று ஆரம்பித்திருந்தனர். இதன்போது நேற்று ஆண் ஒருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்ட நிலையில், மேலும் மூவரை தேடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் இன்று காலை குறித்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

வரக்காபொல மண்சரிவில் சிக்கியிருந்த பெண்ணொருவரின் சடலம் மீட்பு Reviewed by Author on October 15, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.