அண்மைய செய்திகள்

recent
-

துணுக்காய் பிரதேச பண்பாட்டுப் பெருவிழாவிற்கு பனை ஓலை ஏட்டில் பண்பாட்டு அழைப்பிதழ்!

வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் துணுக்காய் பிரதேச செயலக கலாசாரப் பேரவையும் இணைந்து நடாத்தும் “ பண்பாட்டுப் பெருவிழா," நாளை (18.10.2022) செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணிக்கு துணுக்காய் பிரதேச செயலகத்தில் நடைபெறவுள்ளது. இந் நிலையில் இதற்கான அழைப்பிதழ் இன்றைய தினம் (17.10.2022) துணுக்காய் பிரதேச செயலக விழாக்குழுவினரால் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.க.விமலநாதன் அவர்களிடம் கையளிக்கப்பட்டது. 

இதில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய விடயம் யாதெனில் பண்டைய மரபு ரீதியில் பயன்படுத்தப்படும் பனை ஓலைச் சுவடியில் விழா அழைப்பிதழ் வடிவமைக்கப்பட்டு வழங்கப்பட்டமை சிறப்பான அம்சமாகும். மேலும் இதன்போது குறித்த பாரம்பரிய மரபார்ந்த பண்பாட்டினை முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் பாராட்டியுள்ளார்.

 மாவட்ட ஊடகப்பிரிவு, 
 மாவட்டச் செயலகம், 
 முல்லைத்தீவு. 








துணுக்காய் பிரதேச பண்பாட்டுப் பெருவிழாவிற்கு பனை ஓலை ஏட்டில் பண்பாட்டு அழைப்பிதழ்! Reviewed by Author on October 17, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.