அண்மைய செய்திகள்

recent
-

கடவுச்சீட்டு விநியோகத்தில் தாமதம்!

இன்று (8) காலை முதல் வெளிநாட்டு கடவுச்சீட்டு வழங்குவதை குடிவரவு திணைக்களம் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது. அதன் ஊடகப் பேச்சாளர் திருமதி பியுமி பண்டார தெரிவிக்கையில் : கணினி அமைப்பில் ஏற்பட்ட பிழை காரணமாக கடவுச்சீட்டு வழங்கும் பணி இடைநிறுத்தப்பட்டதாக தெரிவித்தார்.

 இதன்படி, குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தின் பத்தரமுல்ல தலைமை அலுவலகம் உட்பட அனைத்து பிராந்திய அலுவலகங்களிலும் வெளிநாட்டு கடவுச்சீட்டு வழங்குவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், இந்த பிழையை விரைவில் நிவர்த்தி செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாளைய தினம் கடவுச்சீட்டு விநியோகத்தை மீளமைக்க முடியும் எனவும் திருமதி பண்டார தெரிவித்துள்ளார்.



கடவுச்சீட்டு விநியோகத்தில் தாமதம்! Reviewed by Author on November 08, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.