அண்மைய செய்திகள்

recent
-

மார்ச் 9 ஆம் திகதி உள்ளூராட்சி மன்ற தேர்தல்: தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு

உள்ளூராட்சி மன்ற தேர்தல் மார்ச் மாதம் 9 ஆம் திகதி நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதேவேளை, உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்பு மனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்தது. 

 வேட்பு மனுக்கள் தொடர்பில் ஆட்சேபனைகளை தெரிவிப்பதற்கு ஒன்றரை மணித்தியாலம் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார். இதன் பின்னர் ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்புமனுக்கள் மற்றும் நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள் தொடர்பில் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளினால் அறிவிக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.


மார்ச் 9 ஆம் திகதி உள்ளூராட்சி மன்ற தேர்தல்: தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு Reviewed by Author on January 21, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.