அண்மைய செய்திகள்

recent
-

O/L பரீட்சை தொடர்பில் பரீட்சை திணைக்களம் முக்கிய அறிவிப்பு

2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையை மே மாதம் நடாத்த திட்டமிட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சை ஆரம்பமாகும் திகதி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். 

 பாடநெறி மற்றும் கற்பித்தல் செயற்பாடுகளை கருத்திற்கொண்டு கல்வி அமைச்சின் அனுமதியின் பேரில் பரீட்சை நடைபெறும் திகதி அறிவிக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். கொவிட் தொற்றுநோய் காரணமாக பரீட்சை நடவடிக்கைகள் தடைபட்டதன் காரணமாக பரீட்சை அட்டவணையில் மாற்றம் ஏற்பட்டது மற்றும் 2020 ஆம் ஆண்டுக்கான கல்விப்பொதுத் தராதர பரீட்சை கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் நடைப்பெற்றிருந்தது. அதன் பெறுபேறுகள் கடந்த நவம்பர் மாதம் வெளியானமை குறிப்பிடத்தக்கது


.
O/L பரீட்சை தொடர்பில் பரீட்சை திணைக்களம் முக்கிய அறிவிப்பு Reviewed by Author on January 07, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.