யாழ்ப்பாணம் கடற்பரப்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 16 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகம் புதுக்கோட்டை மற்றும் நாகப்பட்டினம் ஆகியப் பகுதிகளைச் சேர்ந்தவர்களே இன்று காலை கைது செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது.அதன்படி அவர்களது இரு படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. காரைநகர் கடற்பரப்பில் வைத்து நான்கு மீனவர்ளும் பருத்தித் துறை கடற்பரப்பில் 12 மீனவர்களும் கைது செய்யப்பட்டனர்.
மேலும் அவர்கள் அனைவரும் மயிலிட்டித் துறைமுகத்திற்கு அழைத்து வரப்படுவதுடன் அவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment