வவுனியாவில் மர்மமாக உயிரிழந்த பிள்ளைகள்: உடற்கூறாய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்
அவரது மனைவியும் பிள்ளைகளும் அவரவர் படுக்கையில் தூங்கும் நிலையில் இருந்தனர். அவர்களின் சடலங்கள் போரவையால் நன்கு போர்த்தப்பட்டிருந்தன.
உயிரிழந்தவர்களின் உடற்கூறாய்வு நேற்றும் இன்றும் நடைபெற்றது. அதன் முடிவில் இரு பிள்ளைகளும் கயிற்றால் கழுத்து நெரிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது.
தந்தை தூக்கில் தொங்கியதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்திருக்கின்றார் என்கின்ற முடிவுக்கு சட்ட வைத்திய அதிகாரி வந்துள்ளார்.
கௌசிகனின் சடலத்தில் வேறு எந்தத் தடயங்களோ, காயங்களோ இல்லாத காரணத்தால்அவரது இறப்பு தூக்கில் தொங்கியதால் ஏற்பட்டது என்கின்ற முடிவு எடுக்கப்பட்டிருக்கின்றது.
ஆனால், இரண்டு குழந்தைகளினதும் தாயாரான வரதராயினியின் இறப்புக்கான காரணம் இன்னும் தெரியவரவில்லை.
அவரதும் கணவனான கௌசிகனதும் உடல் உறுப்பு மாதிரிகளும் குருதி மற்றும் சிறுநீர் மாதிரிகளும் மேலதிக ஆய்வுக்காகக் கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளன.
அரச பகுப்பாய்வுத் திணைக்களத்திடமிருந்து முழுமையான அறிக்கை கிடைத்த பின்பே இது தொடர்பில் சட்ட வைத்திய அதிகாரியால் உறுதியான முடிவுக்கு வரமுடியும்.
இதேவேளை, குடும்பத்தினர் கூண்டோடு இறப்பதற்கு முதல் இரவு, அதாவது கடந்த திங்கட்கிழமை (06-03-2023) இரவு அந்த வீட்டுக்கு வந்து சென்றிருக்கின்றது என்று பொலிஸார் அடையாளப்படுத்தியுள்ள ஒரு ஹயஸ் வாகனம் பற்றிய விசாரணைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அந்த வாகனத்தைக் கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வவுனியாவில் மர்மமாக உயிரிழந்த பிள்ளைகள்: உடற்கூறாய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்
Reviewed by Author
on
March 10, 2023
Rating:

No comments:
Post a Comment