அண்மைய செய்திகள்

recent
-

06 வயது சிறுமியின் மரணம்: அலட்சியம், துஷ்பிரயோகம் காரணமா என பொலிஸார் சந்தேகம்

நேற்று பிற்பகல் பின்கெல்ல பிரதேசத்தில் வீடொன்றில் 06 வயது சிறுமி ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஹிரண பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். தாய் மற்றும் தாயின் கள்ளக்காதலுடன் வசித்து வந்த குழந்தை பல நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்ததாகவும், மருத்துவ உதவி வழங்கப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர். 

 குழந்தை இதற்கு முன்னர் பல தடவைகள் தாயின் கள்ளக்காதனால் உடல்ரீதியாக தாக்கப்பட்டதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. செவித்திறன் மற்றும் பேச்சு குறைபாடுள்ள குழந்தையின் உடலில் பல தழும்புகள் மற்றும் வீக்கங்கள் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த மரணம் தொடர்பாக குழந்தையின் 25 வயது தாயும், பெண்ணின் 29 வயது கள்ளக்காதலனும் கைது செய்யப்பட்டுள்ளனர். சடலம் பிரேத பரிசோதனைக்காக களுபோவில கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், மரணம் தொடர்பான நீதவான் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன

.
06 வயது சிறுமியின் மரணம்: அலட்சியம், துஷ்பிரயோகம் காரணமா என பொலிஸார் சந்தேகம் Reviewed by Author on March 08, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.