அண்மைய செய்திகள்

recent
-

வவுனியாவில் சிறப்பாக இடம் பெற்ற மகளீர் தினத்தை முன்னிட்டு பெண் தலைவர்களை கெளரவிக்கு நிகழ்வு

பாலின சமத்துவத்தை மேம்படுத்துவதற்காக சவால்களை எதிர்கொள்வோம் எனும் தொணிப்பொருளில் றகாம நிறுவனம் மற்றும் எல்லைப்பங்காளர் அமைப்புக்களால் ஏற்பாடு செய்யப்பட் மகளீர் தின நிகழ்வு மற்றும் பெண் தலைவர்களை ஊக்கப்படுத்தி கெளரவிக்கும் நிகழ்வு வவுனியா நகரசபை மண்டபத்தில் இடம் பெற்றது சர்வதேச மகளீர் தினத்தை முன்னிட்டு வட மாகாணத்தில் றகமா நிறுவனத்தின் எல்லைப்பங்காளர் அமைப்புக்களில் சிறப்பாக செயற்படும் பெண் தலைவர்களை கௌரவிக்கும் முகமாக றகமா நிறுவனம் மற்றும் எல்லை பங்காளர் அமைப்புக்கள் இணைந்து குறித்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன 

 குறித்த நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக வவுனியா மாவட்ட உதவி மாவட்ட செயலாளர் மஹிந்தன் சபர்ஜா அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக றகமா நிறுவன செயலாளர் நாயகம் திரு.மரிக்கார் திட்டமிடல் பணிப்பாளர் பிறைசூடி உதயமலர் , நோர்வே போரூட் நிறுவனத்தின் சர்வதேச நிகழ்ச்சி திட்ட இணைப்பாளர் ஆனே வவுனியா பொலிஸ் நிலைய உதவி பொலிஸ் பரிசோதகர் A.சிறியலதா வெண்கல செட்டிகுள பெண் அபிவிருத்தி உத்தியோகஸ்தர் S.சுமித்திரா உட்பட றகமா நிறுவன அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர் வடக்கு மாகணத்தில் றகாம நிறுவனத்தால் முன்னெடுக்கப்பட்ட பெண் வலுப்படுத்தல் செயற்திட்டங்கள்,சிறுவர் உரிமை வாழ்வாதாரம்,போதைபொருள்,பெண்கள் தொழில் வாய்ப்பு ,விவசாயம், போன்ற பிரிவுகளில் சிறப்பாக செயற்பட்ட பெண் முயற்சியாளர்கள், தொழில் முயற்சியாளர்கள், உட்பட பல விதமான செயற்பாடுகளில் சிறப்பாக சமூகத்தில் தம்மை வெளிப்படுத்திய முல்லைத்தீவு கிளிநொச்சி வவுனியா மாவட்டங்களை சேர்ந்த 16 பெண் தலைவர்கள் மேற்படி கெளரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.












வவுனியாவில் சிறப்பாக இடம் பெற்ற மகளீர் தினத்தை முன்னிட்டு பெண் தலைவர்களை கெளரவிக்கு நிகழ்வு Reviewed by Author on March 13, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.