.மன்னாரில் தியாகி பொன் சிவகுமாரனின் 49 ஆவது ஆண்டு நினை வேந்தல் அனுஸ்ரிப்பு.
தமிழீழத்தின் முதற் தற் கொடையாளர் தியாகி பொன் சிவகுமாரனின் 49 ஆவது ஆண்டு நினை வேந்தல் இன்று திங்கட்கிழமை(5) மதியம் மன்னாரில் நினைவு கூறப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ மன்னார் மாவட்ட அலுவலகத்தில் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் லுஸ்ரின் மோகன்ராஜ் தலைமையில் குறித்த நினைவேந்தல் இடம் பெற்றது.
இதன் போது தியாகி பொன் சிவகுமாரனின் படத்துக்கு சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது..
குறித்த நினைவேந்தல் நிகழ்வில் ஈ.பி.ஆர்.எல்.எப்.கட்சியின் மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆர்.குமரேஸ், பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர் டானியல் வசந்த்,கட்சியின் முக்கியஸ்தர்கள் என பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
.மன்னாரில் தியாகி பொன் சிவகுமாரனின் 49 ஆவது ஆண்டு நினை வேந்தல் அனுஸ்ரிப்பு.
Reviewed by Author
on
June 05, 2023
Rating:
No comments:
Post a Comment