அண்மைய செய்திகள்

recent
-

வடபகுதியிலிருந்து அனுராதபுரத்திற்கு விஜயின் லியோ பார்க்க சென்றவர்களுக்கு நேர்ந்த கதி - குவிக்கப்பட்ட பொலிஸார்

 நடிகர் விஜயின் நடிப்பில் வெளியாகிய லியோ திரைப்படம் திரையிடப்பட்டு அனைத்து திரையங்கிலும் ஆசனங்கள் முழுமையாக நிறைந்துள்ளமையுடன் தமிழர் பகுதிகளில் குறித்த படத்திற்கான ரிக்கேட் பெறுவதில் பல ரசிகர்கள் ஏமாற்றமடைந்திருந்தனர்.


இந்நிலையில் லியோ திரைப்படம் அனுராதபுரம் பேரூந்து நிலையத்திற்கு அருகேயுள்ள திரையங்கம் ஒன்றில் திரையிடப்படவுள்ளதாக அவர்களின் இணையத்தளத்தில் முற்பதிவுகளுக்கான விடப்பட்டிருந்த நிலையில் யாழ்ப்பாணம் , கிளிநொச்சி , வவுனியா , புத்தளம் , திருகோணமலை ஆகிய பகுதிகளிலிருந்து பெரும்பாலோனோர் குறித்த திரையங்களில் இரவு 7.30 காட்சிக்கு முற்பதிவுகளை மேற்கொண்டிருந்தமையுடன் தூர இடங்களிலிருந்து வருகை தந்தமையினால் பல மணிநேரமாக திரையரங்களில் காத்திருந்தனர்.

லியோ திரைப்படம் திரையிடப்பட்ட சமயத்தில் குறித்த பட காட்சிகளின் ஒலியமைப்பு தெளிவின்மை காணப்பட்டது. பல மணிநேரமாக அவர்களின் தொழிநுட்ப பிரச்சனைகளை பார்வையிட்ட போதிலும் ஒலியமைப்பு சீராகவில்லை இதனால் ஆத்திரமடைந்த ரசிகர்கள் தமக்கு தெளிவான ஒலியமைப்புடன் திரைப்படம் வெளியிடப்பட வேண்டும் அல்லது பணத்தினை மீளத்தருமாறு திரையரங்களில் வரவேற்பு இடத்தினை முற்றுகையிட்டனர். இதனால்  திரையரங்கில் பதட்ட நிலமை அதிகரித்தமையுடன் அனுராதபுரம் பொலிஸார் பேரூந்தில் வருகை தந்து திரையரங்கின் பாதுகாப்பினை பலப்படுத்தினர்.

பல மணிநேரமாக அவ்விடத்தில் பதட்ட நிலமை நிலவியமையுடன் தமக்கு டிக்கேட்டுக்கான பணத்தினை மீளத்தருமாறு அல்லது தெளிவான ஒலியமைப்புடன் படத்தினை திரையிடுமாறு கோரிக்கை விடுத்திருந்தனர். அதற்கு பதிலளித்த திரையரங்க நிர்வாகம் படத்தின் இறுவட்டில் உள்ள பிரச்சனையினால் ஒலி தெளிவின்மை காணப்படுவதாகவும் பணத்தினை கணக்கிற்கு வைப்பிடுவதாகவும் தெரிவித்தனர். எனினும் திரையரங்க நிர்வாகத்தின் நம்பிக்கையில்லை என தெரிவித்தமையுடன் பணத்தினை கையில் தருமாறும் ரசிகர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இறுதியில் பொலிஸாரின் தலையீட்டில் நிர்வாகத்தினர் சில தினங்களில் வங்கிக்கு பணத்தினை வைப்பிடுவதாக தெரிவித்து கடிதம் ஒன்றினை எழுதி வழங்கியமையுடன் தவறுக்கு மன்னிப்பும் கோரியிருந்தமையுடன் தமது தனிப்பட்ட தொலைபேசி இலக்கத்தினையும் வழங்கியிருந்தனர். இதனையடுத்து ரசிகர்கள் திரையரங்கினை விட்டு ஏமாற்றத்துடன் வெளியேறியிருந்தனர்.

150கிலோமீற்றர் தூரத்திற்கு மேற்பட்ட இடங்களிலிருந்து வருகை தந்த ரசிகர்களுக்கு பண விரயமும் மிகுந்த ஏமாற்றமும் அடைந்து தமது கவலைகளை தெரிவித்திருந்தனர்.









வடபகுதியிலிருந்து அனுராதபுரத்திற்கு விஜயின் லியோ பார்க்க சென்றவர்களுக்கு நேர்ந்த கதி - குவிக்கப்பட்ட பொலிஸார் Reviewed by Author on October 22, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.