அண்மைய செய்திகள்

recent
-

தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 8 இந்திய மீனவர்கள் நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை.

 தலைமன்னார் கடற்பரப்பில்   கைது செய்யப்பட்ட 8 இந்திய மீனவர்கள் நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை.  இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை செய்ய மன்னார் நீதவான் நீதிமன்றம்  நேற்று புதன்கிழமை(20) உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த மாதம் 6 ஆம் திகதியன்று இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்தனர்.


கைதான 8 மீனவர்களும் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலை படுத்தப்பட்டதன் பின்னர்  விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.  

இந்நிலையில், இந்த மீனவர்கள்  நேற்று (20) புதன்கிழமை மீண்டும் மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலை படுத்தப்பட்டனர்.

இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட நீதவான் ' நிபந்தனையின் கீழ் அவர்களை விடுதலை செய்தார்.  

இதனைத் தொடர்ந்து விடுவிக்கப்பட்ட மீனவர்கள் இந்தியத் துணைத் தூதரக அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.


தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 8 இந்திய மீனவர்கள் நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை. Reviewed by வன்னி on December 21, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.