அண்மைய செய்திகள்

recent
-

மருதமுனை அக்பர் வித்தியாலயத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் விஜயம்

 மருதமுனை அக்பர் வித்தியாலயத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் விஜயம் : மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் கையளிப்பு !


கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தின் கீழுள்ள மருதமுனை - பெரியநீலாவணை கமு/கமு/ அக்பர் வித்தியாலயத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் (புத்தகப்பை) வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று (02) பாடசாலை அதிபர் எம்.சி.எம்.மபாஸ் தலைமையில் பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது.


இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித்தலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான, பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டு பாடசாலையில் உள்ள குறைநிறைகளை ஆராய்ந்ததுடன் பாடசாலை நிர்வாகத்திடமும், மாணவர்களிடமும் கல்வி மேம்பாட்டு விடயங்கள் தொடர்பில் கருத்து தெரிவித்தார். 


இந்நிகழ்வில் கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ். சஹதுல் நஜீம், கிழக்கு மாகாண கூட்டுறவு ஊழியர்கள் ஆணைக்குழு உறுப்பினரும், பாராளுமன்ற உறுப்பினரின் பொதுஜன தொடர்பாடல் செயலாளருமான யூ.எல்.என். ஹுதா உமர், பாடசாலை பிரதி அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.










மருதமுனை அக்பர் வித்தியாலயத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் விஜயம் Reviewed by வன்னி on February 03, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.