அண்மைய செய்திகள்

recent
-

இலங்கை சிறையில் இருக்கும் மீனவர்களுக்கு விடுதலை வேண்டும் நாளை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட தயாராகும் ராமேஸ்வரம் மீனவர்கள்

 எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு இலங்கை சிறையில் உள்ள ஐந்து மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி தங்கச்சிமடம் பேருந்து நிலையத்தில் நாளை சனிக்கிழமை காலை முதல் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில்  மீனவர்கள் ஈடுபட போவதாக தங்கச்சிமடத்தில் நடைபெற்ற மீனவர்கள் அவசர ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்துள்ளனர்.


 ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்று இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மூன்று மீன்பிடி விசைப்படகு ஓட்டுனருக்கு ஆறு மாத கால சிறை தண்டனையும் ஒரு மீனவருக்கு ஓராண்டு சிறை தண்டனையும், மற்றொரு மீனவருக்கு இரண்டு வருட சிறை தண்டனையும்  விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


 இலங்கை நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை ரத்து செய்யக் கோரியும்,இலங்கை சிறையில் உள்ள ஐந்து ராமேஸ்வரம் மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தியும் சனிக்கிழமை காலை தங்கச்சிமடம் வலசை பேருந்து நிலையத்தில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக தங்கச்சிமடத்தில் ராமேஸ்வரம் மீனவர்கள் நடத்திய அவசர ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்துள்ளனர்.


 மேலும் கடந்த 16 ஆம் தேதியிலிருந்து ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்து விசைப் படகுகள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் மீனவர்களை விடுதலை செய்யும் வரை வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும் என மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.



இலங்கை சிறையில் இருக்கும் மீனவர்களுக்கு விடுதலை வேண்டும் நாளை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட தயாராகும் ராமேஸ்வரம் மீனவர்கள் Reviewed by Author on February 23, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.