அண்மைய செய்திகள்

recent
-

பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமானதாக அறிவிப்பு

 டயானா கமகேவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி இரத்து செய்யப்பட்டுள்ளதால் அந்த பதவி வெற்றிடமாகி உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு பாராளுமன்றம் அறிவித்துள்ளது.


ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான டயானா கமகேவின் பதவி 2024 ஆம் ஆண்டு மே மாதம் 8 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் இரத்து செய்யப்பட்டுள்ளதால் அந்த பதவி வெற்றிடமாகியுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி அறிவித்துள்ளார்.


1981 ஆம் ஆண்டு 1 ஆம் இலக்க பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் 64(1) பிரிவின்படி இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.




பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமானதாக அறிவிப்பு Reviewed by Author on May 09, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.