மன்னார் கோந்தைப்பிட்டி இறங்கு துறையும் அதிகாரிகளின் அதீத அரசியல் ஆதரவும்
கோந்தைப்பிட்டி இறங்கு துறை விடயம் பூதாகரமாக வெடித்து தற்போது இலங்கை முழுவதும் பரவி தனித்துவமான நீதித்துறையைக்கூட மிகவும் இக்கட்டான நிலைக்கு தள்ளியிருப்பது மிகவும் வேதனைக்குரிய விடயமாகும்.
யோசப் வாஸ் நகர மீனவர்கள் உப்புக்குள மீனவர்களது இறங்கு துறையைக் கைப்பற்றி அதை விட்டு அகல மறுப்பது போன்ற ஓர் மாயையை ஏற்படுத்தி யோசப் வாஸ் நகர மீனவர்கள்தான் தற்போதைய இக் குழப்ப நிலைக்குக் காரணகர்த்தாக்கள் என்ற திரிபுபடுத்தப்பட்ட பல செய்திகள் உலாவவிடப்பட்ட நிலையில் இவ் விடயத்தை நன்கு அறிந்தவர் என்றமட்டில் உண்மையில் என்ன நடந்ததது என்பதை இங்கு எடுத்துக்காட்டுவதே எனது நோக்கமாகும்.
1999ம் ஆண்டில் உள்நாட்டு போர் உக்கிரமடையத் தொடங்கிய நிலையில் மன்னார் மாவட்ட பெருநிலப்பரப்பைச் சேர்ந்த விடத்தல்தீவு கிராம மீனவ குடும்பங்கள் கிட்டத்தட்ட ¾ பங்கினர் தமது படகுகளின் மூலம் பல இன்னல்களுக்கு முகங்கொடுத்தவர்களாக மன்னார் தீவின் பள்ளிமுனைக் கிராமக் கடற்கரையை வந்தடைந்தனர். பின்னர் பேசாலை நலன்புரி நிலையத்தின் ஓர்பகுதியில் இவர்கள் தங்கவைக்கப்பட்டனர்.
பேசாலை முகாமை மூடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்தபோது இம் மக்களை தோட்டவெளி வேதசாட்சிகள் அன்னை ஆலயத்திற்குச் சொந்தமான நிலப்பரப்பில் தற்காலிகமாகக் குடியமர்த்துவதற்கு மன்னார் ஆயர் அவர்களால் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இம் மீனவர்கள் பனங்கட்டுக்கொட்டு, பள்ளிமுனைக் கிராம மீனவர்களது இறங்கு துறைகளிலிருந்து தமது மீன்பிடித் தொழிலில் சிறிது காலம் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். இதன் பிற்பாடு இம் மீனவர்கள் கோந்தைப்பிட்டி இறங்கு துறையை பாவிப்பதற்கு ஏற்பாடாகியது.
கோந்தைப்பிட்டி மீன்பிடி இறங்கு துறையை பாவிக்க ஆரம்பித்த காலந்தொட்டே ஒவ்வொரு படகு சொந்தக்காரர்களும், வாடி அமைத்து செயற்பட்டவர்களும், உப்புக்குள மீனவ கூட்டுறவுச் சங்கத்துக்கு ரூபா இரண்டாயிரம் தொடக்கம் நான்காயிரம் வரை வரிப்பணமாகச் செலுத்தி வந்தனர். ஆனால் வசூலித்தவர்கள் இந்த வரிப்பணம் பள்ளிவாசலுக்கு வழங்கப்படுவதாகவே கூறி அதற்குரிய ரசீதை வழங்க மறுத்துவிட்டனர்.
பெறப்பட்ட முழுத் தொகையும் பள்ளியை சென்றடைந்ததா என்பது சந்தேகமே.
தோட்டவெளி யோசப்வாஸ் நகரில் குடியேறிய விடத்தல்தீவு இடம் பெயர்ந்த மீனவ சமூகம்; மன்னார் பிரதேச செயலக, மன்னார் மாவட்ட கடற்றொழில் திணைக்கள நிர்வாகங்கள் ஆகியனவற்றின் ஆலோசனைகளுக்கமைவாகவே செயற்பட்டு வந்தது.
நாடு சுமூக நிலைக்கு திரும்பிய பிற்பாடு, மீளவும் தமது சொந்த இடத்திற்குச் செல்லும் நோக்கம் கொண்டவர்களாக இவர்கள் இருந்த போதிலும் முன்னேற்றம்கண்டுவரும் இவர்களது பிள்ளைகளின் கல்விநிலை தளர்ச்சி அடையலாம் என்றபடியால் சிறிது தயக்கமும் காணப்பட்டது.
இவ் வேளையில் யோசப்வாஸ் நகரில் சொந்தக் காணி இருந்தால் அங்கு மீள்குடியேற்றப்படுவதுடன் அரச உதவிகளும் பெற்றுக் கொடுக்க முடியும் என்ற ஆலோசனை மன்னார் பிரதேச செயலாளரால் இவர்களுக்கு வழங்கப்பட்டது. இதுவே இவர்கள் இங்கு நிரந்தர குடியேற்றவாசிகளாய் மாறுவதற்கு காரணமாகியது.
அத்துடன், இவர்கள் விடத்தல்தீவு மீனவ கூட்டுறவுச் சங்க உறுப்புரிமையை விலக்கிக் கொண்டால், யோசப்வாஸ் நகரத்திற்கென மீனவ அமைப்பை உருவாக்கிக்கொள்ளமுடியும் என்ற ஆலோசனையை மன்னார் கடற்றொலில் திணைக்கள நிர்வாகம் வழங்கவே இவர்கள் அதற்காகிய நடவடிக்கையில் இறங்கினர்.
இம் மீனர்களுக்கு இலங்கை மீன்பிடி துறைமுக கூட்டுத்தாபனத்திற்குச் (ஊகுர்ஊ) சொந்தமான பகுதி அருகாமையில் இருப்பது தெரியவந்தது.
இவர்கள் அப்பகுதியை தற்காலிகமாக தந்துதவுமாறு விண்ணப்பித்ததன் பெயரில் , மன்னார் உதவிக் கடற்றொழில் திணைக்கள பணிப்பாளரின் 2006.03.10ம் திகதிய கடிதம், மன்னார் அரசாங்க அதிபரது 2006.03.14ம் திகதிய கடிதம், கௌரவ.அ.அடைக்கலநாதன்(பா.உ) அவர்களின் 2006.04.08ம் திகதிய கடிதங்களின் ஊடாக சிபாரிசு செய்யப்பட்ட மேற்படி விண்ணப்பத்திற்கு இலங்கை மீன்பிடி துறைமுக கூட்டுதாபனத்திற்குச் சொந்தமான கோந்தைப்பிட்டியிலுள்ள பகுதியினை தற்காலிக அடிப்படையில் இறங்கு துறையாக பாவிப்பதற்கு அக் கூட்டுத்தாபன அன்றைய தலைவர் திரு.யு.அபய குணசேகர அவர்களிடமிருந்து அவரது ஊகுர்ஊஃஊகுஃயுnஉ-ஆயுNNயுசு இலக்க 2006.06.15ம் திகதிய கடிதம் மூலம் அனுமதி கிடைத்தது.
அன்றைய கால கட்டத்தில் மன்னார் பிரதேச செயலாளர் இப் பிரதேசத்திற்குரிய நிலவளவை வரைபடத்தைத் தங்கள் கைவசம் இவர்கள் வைத்திருப்பது நன்று என ஆலோசனை வழங்கியதன் பெயரில் மன்னார் பிரதேச செயலகத்தின் ஊடாக இதன் வரைபடத்தை இவர்கள் பெற்றுக்கொண்டனர்.
கூட்டுத் தாபனத்தின் அனுமதி கிடைத்த பிற்பாடும் கூட உப்புக்குளம் மீனவ கூட்டுறவுச் சங்கத்தலைவர்கள் என கூறப்படுபவர்களால் பணம் தரப்படவேண்டும் என இவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டனர். பிரச்சனை இல்லாதிருப்போம் என்ற ரீதியில் இவர்கள் வரிப்பணத்தை தொடந்தும் செலுத்தி வந்தனர்.
2009ம் ஆண்டில் தள்ளாடி படைமுகாம் அதிகாரி ஒருவர் இம் மீனவர்களைச் சந்தித்து இக் கொடுப்பனவை செலுத்த தேவையில்லை என்று அறிவுறுத்தியதன்பெயரிலேயே மேற்படி கொடுப்பனவு நிறுத்தப்பட்டது.
தங்களுக்கு கிடைத்துவந்த பண வருவாய் நிறுத்தப்பட்டதிலிருந்து உப்புக்குளம் மீனவர்கள் சங்கத் தாலைவர்கள் எனக் கூறிக்கொள்வோருக்கும் யோசப் வாஸ் நகர மீனவர்களுக்கும் இடையிலிருந்துவந்த சுமுக நிலையில் மாற்றம் ஏற்பட்டு முறுகல் நிலை தோன்றத் தொடங்கியது.
இப்படிப்பட்ட நிலை இங்கு தொடர்ந்துகொண்டிருந்த காலகட்டத்தில் இவ்வருடம் மே மாத தொடக்கத்தில் பாராளுமன்றத்தில் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் தொடர்பான சபை ஒத்திவைப்புப் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றிய கௌரவ அமைச்சர் றிசாட் பதியுதின் அவர்கள், மன்னார் மாவட்டத்தின் மீதும், மக்கள் மீதும் நடாத்தப்பட்ட பலவிதமான மனித உரிமை மீறல்களின்போது அவை பற்றி அச்சமின்ற உலகுக்கு எடுத்துரைத்த மன்னார் மறை மாவட்ட ஆயர் மேதகு அதி வண இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்களை தரக்குறைவான வார்தைகளால் விமர்சித்ததைக் கேள்வியுற்று மன்னார் மறை மாவட்ட மக்கள் அனைவரும் கொதித்தெழுந்து எதிர்க்குரல் கொடுக்கவும், ஆயருக்கு உடல் உள ஆன்மீக நலன் கேட்டும் மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் மாபெரும் இறைவேண்டுதல் ஒன்றுகூடல் 2012.05.27இல் நடாத்தப்பட்டது. இதில் ஏனையோருடன் யோசப்வாஸ் நகர மக்களும் பங்கேற்றனர்.
பழிவாங்க வேண்டுமென்ற நோக்கம்கொண்ட முஸ்லிம் அரசியல் தலைமைக்கு யோசப் வாஸ் நகர மக்கள் தான் முதல் இரையாகினர்.
தங்களுக்கு அரசியல் பலமும் செல்வாக்கும் உண்டு, அரச நிர்வாகமும் தங்களுடன்தான் என்ற நோக்கம் கொண்ட உப்புக்குள மீனவசங்கத் தலைவர்கள் எனத் தங்களைக் காட்டிக்கொண்டோர் சிலர் 2012.06.04 மதிய வேளையில் யோசப்வாஸ் நகர மீனவர்களின் நூற்றிற்கும் மேற்பட்ட மீன்பிடி வள்ளங்கள் தரித்து நிறுத்தப்பட்டிருந்த கோந்தைப்பிட்டிக்குச் சென்று அங்கிருந்து இவர்கள் வெளியேற வேண்டும் அன்றேல் அங்குள்ள வள்ளங்களும் கொட்டில்களும் எரியூட்டப்படும் என்று கூறி பயமுறுத்தினர். தாங்கள் அவ்விடத்திற்குச் சொந்தம்கொண்டாடவில்லை.
தங்களுக்காகவென ஓர் இடம் அரச அதிகாரிகளினால் கொடுக்கப்பட்டதும் தாம் அங்கிருந்து அகன்றுவிடுவோம் என்று கூறியும் கூட அவர்கள் அதற்கு செவிமடுப்பதாக இல்லை. வேறு வழியின்றி இவ்விடயம் காவல் துறையினருக்கு கொண்டு செல்லப்பட்டது. பாதுகாப்பு அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறவில்லை. இது விடயம் தொடர்பாக 2012.06.11இல் கச்சேரியிலும், அதனைத்தொடந்து 2012.06.15இல் மன்னார் பிரதேச செயலகத்திலும் ஒன்று கூடல்கள்;; நடாத்தப்பட்டன. 2012.06.15இல் நடந்த ஒன்று கூடலின்போது நடந்தேறிய விடயம்தான்; மிகவும் மனிதாபிமானமற்றதாகும்.
2012.06.15 திகதிய கூட்டறிக்கையின் பிரகாரம் பிரதேச செயலாரின் கூற்று:
'2005இல் நான் இங்கு வந்தேன், 2006இல் கோவை பார்த்த பின்புதான் 09 ஏக்கர் காணியும் காபர் கோப்பரேசனுக்கு கோரிக்கைவிடப்பட்ட காணியே தவிர காபர் கோப்பரேசனுக்கு வழங்கப்படவில்லை. இக்காணி அரச காணியே என அறிந்தேன்'
இலங்கை மீன்பிடி துறைமுக கூட்டுத்தாபனம் இங்கு நிர்மாணப்பணிகளில் ஈடுபட்டிருந்ததை மன்னார் மக்கள் நன்கறிவர். இதற்கும் அப்பால் அவர்களால் நிர்மாணிக்கப்பட்ட, அதிகாரிகளும், வேலையாட்களும் தங்கி பணியாற்றுவதற்கான கட்டடமும், கூட்டுத்தாபனத்தின் மீன் நங்கூர சின்னம் பொறிக்கப்பட்ட நீர்த்தாங்கியும் தற்போதும் அங்கு காட்சியளிக்கின்றன. இவை அனைத்தும் தமக்குச் சொந்தமற்ற காணியில் இலங்கை மீன்பிடி துறைமுக கூட்டுத்தாபனம், அரச விதிகளையும் மீறி சட்ட விரோதமாக நிர்மாணித்தது என்பதையா மேற்குறித்த கூற்றின் மூலம் பிரதேச செயலாளர் எடுத்துக்காட்ட முற்படுகின்றார்?.
அல்லது 2005இல் தான் கடமையேற்று 2006இல் தான் கோவை பார்த பிற்பாடு சுயமாக அவை தோன்றியிருக்கும் என கூறப்பார்க்கிறாரா? இதற்கப்பால் இதே பிரதேச செயலாலரினால் நிலவளவை திணைக்களத்திலிருந்து பெற்றுக் கொடுக்கப்பட்ட முன்கூறப்பட்ட 16.10.2006ம் திகதியைக்கொண்ட 211 இலக்க வுசயஉநன கசழஅ குவுளுP 15இளூநநவ ழே.31 என்ற வரைபடத்திலும், அடுத்தாற்போல் மூன்று வருடங்களுக்குப் பின்னர் மன்னார் பிரதேச செயலாளரின் கோரிக்கைக்கமைய (கடித இல: ஆNனுஃளுசுஃடுமுஃமுPஃ2008ஃ08 திகதி 2008.12.17) வரையப்பட்ட டீடுழுஊமுஐNபுழுருவு னுஐயுபுசுயுஆ குழுசு சுநுளுநுவுவுடுநுஆநுNவு ளுஊர்நுஆநு யுவு முழுNவுர்யுPஐனுனுலு என்ற தலையங்கமிடப்பட்ட வுசயஉiபெ ழே:ஆயnஃஆNNஃ2009ஃ001 இலக்கமிடப்பட்ட நில அளவை வரைபடத்திலும் ஊநலடழn குiளாநசநைள ர்யசடிழரச ஊழசிழசயவழைn என குறித்துக்காட்டப்பட்டுள்ளன. இவ்விரு வரைபடங்களும் பொய்யானவையா?
2012.06.15ம் திகதிய இதே ஒன்றுகூடலில் உதவிமாவட்ட செயலாளரின் கூற்று:
'காபர் கோப்பரேசன் காணியை குடியிருக்க வழங்கும்படி கோரிக்கை விடப்பட்டுள்ளது. 09 ஏக்கரையும் காபர் கோப்பரேசன் விடுவித்தால் உப்புக்குள மக்களுக்கு வழங்க முடியும்'.
மேற்படி கூட்டத்தில் மன்னார் பிரதேச செயலாளர் கூற்றின்படி, குறித்த காணி அரச காணியே தவிர காபர் கோப்பரேசனுக்கு சொந்தமானதல்ல என்றதும், உதவிமாவட்ட செயலார் 09 ஏக்கரையும் காபர் கோப்பரேசன் விடுவித்தால் உப்புக்குள மக்களுக்கு வழங்க முடியும் என கூறியிருப்பதும் ஒரு அரச காணி மாவட்ட செயலக கோவையின்படி கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமானதாகவும், பிரதேச செயலக கோவையின்படி கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமற்ற அரச காணியாகவும் காணப்படுகிறதா ? அல்லது காட்ட முயற்சிக்கப்படுகின்றதா?
அடுத்தபடியாக இவர்களுடன் தொடர்புடைய மீன்பிடித் திரைணக்கள நிர்வாகத்தை எடுத்துக்கொண்டால் யோசப் வாஸ் நகர மீனவர்களுக்கு விடத்தல்தீவிலுள்ள சங்க உறுப்புரிமையை நீக்கிக்கொள்ளுமாறு ஆலோசனை கூறியதுடன் நின்றுவிடாமல் அதற்கு மேலும் சென்று கொழும்பு மீனவ தொழில் பிரிவு திணைக்கள பணிப்பாளருக்கு (னுசைநஉவழச குiளாநசநைள ஐனெரளவசநைள னுiஎளைழைn) தனது ஆNனுகுஃஊகுர்ஊஃ01 இலக்க 2011.06.10 திகதிய கடிதம்மூலம் இந்த மீனவர்கள் யோசப் வாஸ் நகரில் நிரந்தரமாக குடியேறியுள்ளனர் இவர்களுக்கு மீன்பிடி துறைமுக கூட்டுத்தாபனத்திற்கு (ஊகுர்ஊ) சொந்தமான பகுதியில் 200 மீற்றர் பகுதியை ஒதுக்கி கொடுக்க வேண்டுமென சிபாரிசு செய்துள்ளார்.
இவரது மேற்படி கடிதமும் மீன்பிடி துறைமுக கூட்டுத்தாபனத்திற்கு (ஊகுர்ஊ) சொந்தமான காணி இருப்பதையே காட்டுகின்றது.
யோசப் வாஸ் நகர மீனவபிரதிநிதிகளும், பங்குத் தந்தையும், மீனவர்கள் தொழிலுக்குச் செல்லாது விட்டால் இவர்களது குடும்பங்கள் பட்டினியை எதிர்கொள்ளவெண்டிய நிலையேற்படும் என்று பலமுறை வேண்டியும் கூட அவை செவிசாய்க்கப்படாமல் அடுத்த நாளிலிருந்து இவர்கள் தொழிலுக்கு போக முடியாது என்ற மனிதாபிமானமற்ற கட்டளையுடன் மேற்படி கூட்டம் முடிவுற்றது மிகவும் வேதனைக்குரிய விடயமாகும்.
2012.06.15ம் திகதி நடந்த மேற்படி கூட்டத்தில் கொடுக்கப்பட்ட கட்டளையின் பிரகாரம் அடுத்தநாள் தொடக்கம் தொழிலுக்குச் செல்வதை இவர்கள் நிறுத்திக்கொண்டார்கள். இரண்டு கிழமைகள் தாக்குப்பிடித்தும் தமது குடும்ப அங்கத்தவர்களது நிலையை கண்ணுற்று வேறு வழியின்றி மீன்பிடியை திரும்பவும் ஆரம்பித்தனர்.
2012.06.25இல் மன்னார் நகர சபை முஸ்லிம் உறுப்பினர் ஒருவரும், ஏனையோரும் சேர்ந்து கோந்தைப்பிட்டியில் அமைந்திருந்த கொட்டில்களுக்கு நாசம் விளைவித்தனர்.
2012.06.26 இல் மீண்டும் இப்பிரச்சனை தொடர்பான கூட்டம் கச்சேரியில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் தலைமன்னார் வீதியில் 2ம் கட்டையில் இடம் ஒதுக்கிக் கொடுப்பதாக பிரதேச செயலாரினால் தெரிவிக்கப்பட்டு இடமும் குறித்துக்காட்டப்பட்டது. குறிப்பிடப்பட்ட இடத்தில் ஆயத்தங்கள் நடைபெற்றபோது அந்த நிலப்பரப்பு நிதிமன்ற 136, 138 இலக்க வழக்குகளுடன் தொடர்புடையது என தெரிவித்து நீதி மன்றுக்கு வருமாறு யோசப்வாஸ் நகர மீனவர்களுக்கு அழைப்பாணை விடப்பட்டது.
மேற்படி 2012.06.26ம் திகதிய கூட்;டதில் அங்கு பங்குபற்றிய பொலிஸ் உயர் அதிகாரி கோந்தைப்பிட்டியிலுள்ள கொட்டில்கள் அனைத்தும் அகற்றப்பட்டு அங்கிருந்து தொழில் புரிவதும் நிறுத்தப்படல் வேண்டுமென்று உத்தரவையும் பிறப்பித்தார்.(ஆதாரம் கூட்ட அறிக்கை)
2ம் முறையும் தொழிலுக்குச் செல்வதை நிறுத்திக்கொண்ட இம் மீனவர்கள் மூன்று கிழமைக்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டதும் மீண்டும் தமது தொழிலுக்குச் சென்றனர். இவ்விடயம் கடிதம் மூலம் ஓர் பொருத்தமான மாற்றுவழியை தமக்கு காட்டும்படி கேட்டு பொலிஸ் திணைக்களத்திற்கும், தெரிவிக்கப்பட்டது. இதன் பிற்பாடுதான் இப் பிரச்சனை நீதிமன்றுக்கு கொண்டுசெல்லப்பட்டது.
நீதி மன்றத் தீர்ப்பில் தமக்கு திருப்தியில்லை என்றால் மேல் நீதி மன்றத்திற்கு செல்வதற்குரிய வழி இருந்தும் கூட சினிமாக்களில் நடப்பது போன்று 'நாட்டாமை உன் தீர்ப்பை மாற்று' என்பது போல் நீதி மன்றத்தின முன்னால் சாதாரண மக்கள் சென்று நீதி மன்ற அமர்வுகளை குழப்பும் விதமாக தீர்ப்பை மாற்றும்படி கோசம் எழுப்புவார்களாயின் இதற்கு பலமான பின்புலம் இருந்தே ஆக வேண்டுமென்று மக்கள் கருதுவதில் நியாயம் இல்லாமலில்லை. இந்த விடயத்தைக்கூட மிக அமைதியாக இவர்கள் செயற்பட்டதாக சிலர் ஊடகங்களுக்கு பேட்டிகளை கொடுப்பது சாதாரண முஸ்லிம் பொதுமக்களை மேலும் மேலும் தூண்டும் செயல் அல்லவா.
01. மீன்பிடி துறை முகக் கூட்டுத்தாபனக் கடிதம், இரண்டு வரைபடங்கள் கூட்டுத்தாபனத்தின் அசையாச் சொத்துகள் ஆகியவை இருந்தும் கூட முழுப் பூசணிக்காயை சோற்றில் புதைப்பது போன்று செயற்பட்டு கூட்டுத் தாபனத்திற்கு அங்கு இடமில்லை என சாதிக்க மன்னார் பிரதேச செயலாளர் முற்பட்டமை.
02. கொளரவ அமைச்சர் றிசாட் பதியுதீனால் விழா எடுத்து திறந்துவைக்கப்பட்டு அட்டை சங்குத்தொழில் பருவகாலத்தற்கு மட்டும் செயற்படும் 06 இயந்திரப்படகுகள் தரித்து நிற்கும் பகுதியும் கூட்டுத்தாபனத்தின் பகுதியோடு படகுகள் நிறுத்தக்கூடிய வேறு பகுதியும் அங்கு இருப்பது மன்னார் பிரதேச செயலாளரினால் மூடி மறைக்கப்பட்டமை.
03. உப்புக்குள மீனவர்களுக்கு மேற்படி 06 இயந்திரப்படகுகள் மட்டுமே உள்ள நிலையில் அவர்களது ஏராளமான படகுகளும் வள்ளங்களும் தரித்து நிறுத்த இடமின்றி அவதியுறுவது போன்ற மாயையை உருவாக்கியமை.
என்பன, எரிகின்ற நெருப்பில் எண்ணையை வார்ப்பது போன்றதல்லவா?
உண்மையான யதார்த்த நிலையை எடுத்துக்காட்டி முரண்பாடுகளை கையாள வேண்டிய தொடர்புடைய அரச திணைக்கள நிர்வாகிகள் உயர் பதவிகளை நோக்கமாகக் கொண்ட சுய இலாபத்திற்காக சுயநல நோக்கோடு உண்மைக்கு புறம்பான கருத்துகளை வெளியிட்டதன் மூலம் சாதாரண முஸ்லிம் மக்களைத் தூண்டியமையே தற்போதைய குழப்ப நிலைக்கு காரணமாகும்.
மீன்பிடி துறை முகக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான காணியையும் அது உப்புக்குள முஸ்லிம் மீனவர்களுக்குச்சொந்தமானது என அவர்களுக்கு கூறி அவர்களை ஏமாற்றியதன் மூலம் அவர்களுக்கு தங்களது காணி பறிபோகின்றது என்ற உணர்வை மன்னார் பிரதேச செயலாளர் அவர்கள் ஊட்டியதன் விளைவே இந்த கலவரங்களிற்கு அத்திவாரமிட்டது.
உண்மையில்
1. யோசப்வாஸ் நகர மீனவர்கள் கோந்தைப்பிட்டியிலுள்ள முஸ்லிம் மீனவர்களுக்குச்சொந்தமான இறங்கு துறையை சொந்தங்கொண்டாடவில்லை. ஆயினும் சொந்தம் கொண்டாடுகிறார்கள் என்ற மாயை உருவாக்கப்பட்டது.
2. உப்புக்குள முஸ்லிம் மீனவர்கள் தங்களது காணியை தவிர வேறு காணி(மீன்பிடி துறை முகக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான காணி) இருப்பதை அறிந்திருக்கவில்லை.
போன்றனவையே கோந்தைப்பிட்டி முரண்பாடுகளை தோற்றுவித்துள்ளன. இதற்கு யார் யார் காரணம்?
முரண்பாடு என்பது ஒரு விடயத்தைப்பற்றி ஒன்றிற்கு மேற்பட்டோர் வெவ் வேறு வகைகளில் அல்லது அளவுகளில் விளங்கிக்கொள்வதாலேயே ஏற்படுகின்றது. இதனை முகாமை செய்வது என்பது யதார்த்த நிலையை அல்லது உண்மைத்தன்மையை சம்பந்தப்பட்ட தரப்பினர்களுக்கு தெளிவுபடுத்துவதாகும். இப்பணி பொதுவாக மத்தியஸ்தர்கள், நடுநிலையாளர்கள், அனுசரணையாளர்கள் ஆகியோரையே சாரும்.
ஆனால் துரதிஸ்டவசமாக இம் முரண்பாடு மத்தியஸ்தர்களாக, நடுநிலையாளர்களாக செயற்பட்டிருக்கவேண்டியவர்கள் தமது உயர் பதவியை நோக்காகக்கொண்டு அதீத ஆதரவை அரசியல்வாதிகளுக்கு காட்ட முற்பட்டமையாலும், உண்மையை மறைத்தமையாலேயுமே ஏற்பட்டுள்ளது.
மன்னார் இணையத்துக்காக எஸ்.வினோ
மன்னார் இணையத்துக்காக எஸ்.வினோ
மன்னார் கோந்தைப்பிட்டி இறங்கு துறையும் அதிகாரிகளின் அதீத அரசியல் ஆதரவும்
Reviewed by NEWMANNAR
on
September 01, 2012
Rating:

No comments:
Post a Comment