மன்னார் மறைசாட்சிகளின் நினைவு விழா
மன்னார் மறைசாட்சிகளின் நினைவு விழா அண்மையில் மன்னார் தோட்டவெளி வேத சாட்சிகளின் இராக்கினி அலையத்தில் இடம் பெற்றது.
1544 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தோட்டவெளிப்பகுதியில் வாழ்ந்து வந்த ''கமண்டல குல'' மக்கள் கிறிஸ்தவ மதத்தை தழுவியதற்காக யாழ்ப்பாண மன்னன் சங்கிலியனினால் படுகொலை செய்யப்பட்டனர்.
இந்த வேலை கிறிஸ்துவுக்காக தம் உயிரை ஈர்த்து வேத சாட்சிகளாக மரித்த விசுவாசிகளை நினைவு கூர்ந்து மன்னார் மாவட்டத்தில் உள்ள 23 கிராமங்களில் உள்ள ''கமண்டல குல'' மக்கள் ஒன்று கூடி தம் முன்னோரை நினைவு கூர்ந்த விழாவாகவும்,கிறிஸ்தவர்கள் ஒன்று கூடி வேத சாட்சிகளை போற்றும் நிகழ்வாகவும் இவ்விழா அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் நிருபர்
மன்னார் மறைசாட்சிகளின் நினைவு விழா
Reviewed by NEWMANNAR
on
September 02, 2012
Rating:

No comments:
Post a Comment