அண்மைய செய்திகள்

recent
-

பாண் மற்றும் பேக்கரிப் பொருட்களின் விலை உயர்வு

மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதால் நாளை முதல் பாண் உட்பட அனைத்து வகையான பேக்கரி உற்பத்திப்பொருட்களுக்கான விலைகள் அதிகரிக்கப்படுமென அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.


 அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

 கடந்த வாரம் அரசாங்கம் ஒரு கிலோ மாவின் விலையை 4 ரூபா முதல் 6 ரூபா வரை அதிகரித்துள்ளதால் பேக்கரி உற்பத்திகளுக்கு விலையேற்ற வேண்டிய நிலையேற்பட்டுள்ளது. இவ்வாறான விலை உயர்வுகளால் கடந்த காலங்களில் 2000 இற்கும் மேற்பட்ட பேக்கரிகள் வியாபாரம் செய்யமுடியாமல் மூடவேண்டிய நிலையேற்பட்டது.

 மேலும் இவ்வாறான நிலை தொடருமானால் தங்களால் வியாபரம் செய்யமுடியாது போகுமெனவும் அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாண் மற்றும் பேக்கரிப் பொருட்களின் விலை உயர்வு Reviewed by NEWMANNAR on October 29, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.