அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் நீதிமன்ற சட்டத்தரணிகள் பணிப்பகிஸ்கரிப்பில்-பட இணைப்பு.

பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றப்பிரேரணை கண்டித்து வடமாகாண சட்டத்தரணிகள் இன்று புதன் கிழமை பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.இந்த நிலையில் மன்னார் சட்டத்தரணிகளும் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர். இதனால் இன்று மன்னார் நீதிமன்றத்தின் செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்த நிலையில் காணப்பட்டது.


 சட்டத்தரணிகள் நீதிமன்றிற்கு சென்றிருந்த போதும் அவர்கள் நீதிமன்ற செயட்பாடுகளில் ஈடுபடாமல் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர். இதனால் வழக்கு விசாரனைகளுக்காக வந்த பலர் திரும்பிச் சென்றனர்.







 இன்று புதன் கிழமை 28 ஆம் திகதிக்கூறிய அணைத்து வழக்கு விசாரணைகளும் எதிர்வரும் ஜனவரி மாதம் 16 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.(16-01-2012). இதே சமயம் இன்று அழைத்துவரப்பட்ட கைதிகளுக்கு தொடர்ந்து 14 நாள் விளக்கமறியல் உத்தரவும் பிரப்பிக்கப்பட்டள்ளது.
மன்னார் நீதிமன்ற சட்டத்தரணிகள் பணிப்பகிஸ்கரிப்பில்-பட இணைப்பு. Reviewed by NEWMANNAR on November 28, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.