அடிப்படை வசதிகள் எவையும் இன்றி வாழும் மன்னார் சிறுநாவற்குளம் கிராம மக்கள்.
மன்னார்-மதவாச்சி பிரதான வீதியில் அமைந்துள்ள மன்னார் சிறுநாவற்குளம் கிராமத்தில் குடியமர்ந்துள்ள மக்கள் எவ்வித அடிப்படை வசதிகளும் இன்றி வாழ்ந்து வருவதாக அந்த மக்கள் தெரிவிக்கின்றனர்.
நாட்டில் இடம் பெற்ற யுத்த சூழ்நிலையின் காரணமாக குறித்த கிராம மக்கள் இடம் பெயர்ந்து சென்று அயல் கிராமங்களிலும்,இந்தியாவிலும் வாழ்ந்து வந்தனர். தற்போது நாட்டில் யுத்தம் முடிவடைந்த நிலையில் இடம் பெயர்ந்த மக்கள் மீண்டும் தமது சிறு நாவற்குளம் கிராமத்திற்கு வந்துள்ளதோடு இந்தியாவிற்கு சென்றவர்களும் மீண்டும் தமது கிராமத்திற்கு திரும்பியுள்ளனர்.
தற்போது வரை சுமார் 50 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் அந்த கிராமத்தில் தற்காலிக கொட்டில்களை அமைத்து வாழ்ந்து வருகின்றனர். சுமார் 3 வருடங்களாக குறித்த கிராமத்தில் இந்த மக்கள் அடிப்படை வசதிகள் எவையும் இன்றி உள்ளனர்.குடி நீர்,மலசலகூடம்,மின்சாரம் போன்ற எவ்வித வசதிகளும் அந்த கிராமத்தில் இல்லை. தமது குடியிருப்புக்கள் பாலைவனத்தினுள் அமைத்து வாழ்ந்து வருவது போல் தாம் வாழ்ந்து வருவதாக அந்த மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
எனவே அரசாங்க அதிபர்,பிரதேச செயலாளர்கள்,அரசியல் வாதிகள் இது வரை எமது நிறந்தர குடியேற்றத்தில் அக்கரை காட்டவில்லை என அந்த மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதே வேளை முருங்கன் சந்தியில் இருந்து பல காணிகளை தென்பகுதியை சேர்ந்த சிங்கள மக்கள் பிடித்து வீடுகளை அமைத்து வருகின்றதாகவும்,ஆனால் எமது சொந்த மண்ணில் நாங்கள் குடியமர எந்த வித உதவிகளும் கிடைக்க வில்லை எனவும் இதனால் ஆண்கள்,பெண்கள்,சிறுவர்கள்,வயோதிபர்கள் என அணைவரும் பாதீப்படைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் இடம் பெற்ற யுத்த சூழ்நிலையின் காரணமாக குறித்த கிராம மக்கள் இடம் பெயர்ந்து சென்று அயல் கிராமங்களிலும்,இந்தியாவிலும் வாழ்ந்து வந்தனர். தற்போது நாட்டில் யுத்தம் முடிவடைந்த நிலையில் இடம் பெயர்ந்த மக்கள் மீண்டும் தமது சிறு நாவற்குளம் கிராமத்திற்கு வந்துள்ளதோடு இந்தியாவிற்கு சென்றவர்களும் மீண்டும் தமது கிராமத்திற்கு திரும்பியுள்ளனர்.
தற்போது வரை சுமார் 50 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் அந்த கிராமத்தில் தற்காலிக கொட்டில்களை அமைத்து வாழ்ந்து வருகின்றனர். சுமார் 3 வருடங்களாக குறித்த கிராமத்தில் இந்த மக்கள் அடிப்படை வசதிகள் எவையும் இன்றி உள்ளனர்.குடி நீர்,மலசலகூடம்,மின்சாரம் போன்ற எவ்வித வசதிகளும் அந்த கிராமத்தில் இல்லை. தமது குடியிருப்புக்கள் பாலைவனத்தினுள் அமைத்து வாழ்ந்து வருவது போல் தாம் வாழ்ந்து வருவதாக அந்த மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
எனவே அரசாங்க அதிபர்,பிரதேச செயலாளர்கள்,அரசியல் வாதிகள் இது வரை எமது நிறந்தர குடியேற்றத்தில் அக்கரை காட்டவில்லை என அந்த மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதே வேளை முருங்கன் சந்தியில் இருந்து பல காணிகளை தென்பகுதியை சேர்ந்த சிங்கள மக்கள் பிடித்து வீடுகளை அமைத்து வருகின்றதாகவும்,ஆனால் எமது சொந்த மண்ணில் நாங்கள் குடியமர எந்த வித உதவிகளும் கிடைக்க வில்லை எனவும் இதனால் ஆண்கள்,பெண்கள்,சிறுவர்கள்,வயோதிபர்கள் என அணைவரும் பாதீப்படைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அடிப்படை வசதிகள் எவையும் இன்றி வாழும் மன்னார் சிறுநாவற்குளம் கிராம மக்கள்.
Reviewed by NEWMANNAR
on
November 28, 2012
Rating:

No comments:
Post a Comment