அண்மைய செய்திகள்

recent
-

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 24 மீனவர்கள் கைது.

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து கடல் தொழிலில் ஈடுபட்டு வந்த இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 24 மீனவர்களை நேற்று புதன் கிழமை மாலை கடற்படையினர் கைது செய்து தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.


 இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 24 மீனவர்கள் 6 இழுவைப்படகுகளின் மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது அவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள்  நுழைந்த நிலையில் அவர்களை கடற்படையினர் நேற்று மாலை கைது செய்துள்ளனர்.

 இவர்களுடைய 6 இழுவைப்படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளது.குறித்த 24 மீனவர்களும் தற்போது தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் விசாரணைகளின் பின் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளதாக தலைமன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர்களுடைய 6 படகுகளும் தலைமன்னார் கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 24 மீனவர்கள் கைது. Reviewed by NEWMANNAR on June 06, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.