அண்மைய செய்திகள்

recent
-

விபத்தில் இளைஞர் பலி.

மன்னார் தாராபுரம்- எருக்கலம்பிட்டி பிரான வீதியில் நேற்று புதன் கிழமை மாலை இடம் பெற்ற விபத்தில் தாராபுரம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


தாராபுதத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் உழவு இயந்திரம்(டெக்டர்) வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த போது எருக்கலம் பிட்டி வீதியூடாக தாராபுரம் கிராமத்திற்கு உழவு இயந்திரத்தை வேகமாக கொண்டு செல்ல முட்பட்ட போது உழவு இயந்திரம் கட்டுப்பாட்டை இழந்து பள்ளப்பகுதிக்குள் சென்றுள்ளது.

இதன் போது உழவு இயந்திரத்தின் பின்னால் இருந்த 2 இளைஞர்கள் தூக்கி வீசப்பட்டுள்ளனர்.

இதன் போது உழவு இயந்திரத்தில் இருந்த முஹம்மது லதீப் சதாத்(வயது-20) என்ற இளைஞர் தலையில் பலமாக தாக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மற்றைய இளைஞர் படுகாயமடைந்த நிலையில் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
விபத்தில் இளைஞர் பலி. Reviewed by NEWMANNAR on June 06, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.