தேசிய சுதந்திர முன்னணியினால் வடமாகாண சபைத்தேர்தலுக்கு எதிராக மன்னார்,வவுனியாவில் கையெழுத்து வேட்டை-
குறித்த கையெழுத்து வேட்டை தேசிய சுதந்திர முன்னணியின் உறுப்பினர்களினால் வவுனியா,மன்னார் ஆகிய மாவட்டங்களில் இன்று ஆரம்பித்துள்ளனர்.
-இதே வேளை மக்களுக்கு துண்டுப்பிரசுரங்களும் வினியோகிக்கப்பட்டுள்ளது.
''அதிமேதகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அவர்களே பிரிவினை வாதங்களுடன் வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்துதல் புதிய தமிழ் ஈழம் நடவடிக்கையில் சிக்கிக்கொள்ளுதலே'' என்ற தொனிப்பொருளில் மக்கள் மத்தியில் குறித்த துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டு அவர்களிடம் கையெழுத்துக்களும் பெறப்படுகின்றது.
அமைச்சர் விமல் வீரவன்ச அவர்களின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் என கூறும் ஒருவரினால் அரச திணைக்கள பணியாளர்களிடம் கையெழுத்து பெறப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் உள்ள சகல அரச திணைக்களங்களுக்கும் செல்லும் குறித்த நபர் தான் அமைச்சர் விமல் வீரவன்ச வின் மாவட்ட இணைப்பாளர் என கூறி அரச திணைக்கள பணியாளர்களை பலவந்தப்படுத்தி கையெழுத்து பெறப்பட்டு வருவதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
கையெழுத்து வைக்காது விட்டால் கடமையில் இருந்து தூக்கப்படுவதாக அச்சுறுத்துவதாகவும்,இதனால் பல அரச ஊழியர்கள் அச்சத்தின் காரணமாக கையெழுத்திட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட அரச பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தேசிய சுதந்திர முன்னணியினால் வடமாகாண சபைத்தேர்தலுக்கு எதிராக மன்னார்,வவுனியாவில் கையெழுத்து வேட்டை-
Reviewed by Admin
on
June 05, 2013
Rating:

No comments:
Post a Comment