மன்னார் மாவட்ட மீனவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய 2 மாத எரிபொருள் மானிய முத்திரைகளை வழங்க கோரிக்கை.

மன்னார் மாவட்டத்தில் உள்ள கடற்தொழிலாளர்களுக்கு இந்த வருடம் மார்ச் மாதம் வரை மட்டுமே எரிபொருள் மாணிய முத்திரை வழங்கப்பட்டுள்ளது.
ஏப்ரல்,மே ஆகிய இரண்டு மாதங்களுக்கமாண எரிபொருள் மாணிய முத்திரை வழங்கப்படவில்லை.

இதனையும் மீறி ஜீவனோபாயத்தை பெற்றுக்கொள்ள கடலுக்குச் செல்லும் இவர்கள் எரிபொருட்களை அதிகமாக பயண்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் அரசு மீனவர்களுக்கு மாணியமாக வழங்கும் எரிபொருள் மாணிய முத்திரைகள் இவ் இரண்டு மாதங்களும் வழங்கப்படாமையினால் அந்த மீனவர்கள் சங்கம் மற்றும் உரவினர்களிடம் கடன் பெற்று கடலுக்குச் சென்று தொழில் செய்கின்றனர்.
-எனவே இவர்களின் இச்சுமையை குறைக்க விரைவாக இவ் மாணிய முத்திரைகளை கடல் தொழில் திணைக்களம் கடல் தொழில் அமைச்சிடம் இருந்து துரித கதியில் பெற்று மீனவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இது தொடர்பாக மன்னார் மாவட்ட கடல் தொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளர் அவர்களுக்கு எழுத்து மூலம் கோறிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மன்னார் மாவட்ட மீனவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய 2 மாத எரிபொருள் மானிய முத்திரைகளை வழங்க கோரிக்கை.
Reviewed by NEWMANNAR
on
June 05, 2013
Rating:

No comments:
Post a Comment