அண்மைய செய்திகள்

recent
-

பருத்தித்துறையில் நகரின் சுரங்கம்-துறைமுகத்தை நோக்கியா?முயற்சியில் இராணுவம்

கடந்த மாதம் பருத்தித்துறை நகரின் பஸ் நிலையத்தினை சுற்றியுள்ள வீதிகள் திருத்தும் பணியில் ஈடுபட்டிருந்த புல்டோசர் வாகனம் வீதியிலுள்ள பாரிய குழியொன்றில் திடீரென்று இறங்கியது.

இதன் பின்னர் அந்த குழி நீண்டு கொண்டு சென்றதால் அச்சமடைந்த வீதி புனரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்த நிறுவனத்தினர் இதனை இராணுவத்தினருக்கு அறிவித்திருந்தனர்.

 பின்னர் அங்குவந்த இராணுவத்தினர் சுரங்க பாதையின் முடிவு எல்லையை தேடும் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.குறித்த சுரங்க பாதை துறைமுகத்தை நோக்கித்தான் அமைந்துள்ளதா?என்கின்ற ஆய்வில் ஈடுபட்ட போதும் அது வெற்றியளிக்கவில்லை.

இதை தொடர்ந்தே இன்றுஅப்பகுதியில் இராணுவத்தினர் சீனப் பணியாளர்களின் உதவியுடன் தோண்டி அது ஊடகங்களில் வெளியாகியது போன்று விடுதலைப் புலிகள் பாவித்த சுரங்க வழிப் பாதைதானா என கண்டுபிடிக்கும் நோக்கில் தீவிரமாக தோண்டும் பணியில் ஈடுபட்டுவருவதாக தெரியவருகின்றது..

பருத்தித்துறையில் நகரின் சுரங்கம்-துறைமுகத்தை நோக்கியா?முயற்சியில் இராணுவம் Reviewed by Admin on August 05, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.