அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்டத்தில் சுய தொழில் முயற்சியில் ஈடுபட்டவர்களுக்கு வங்கி கடன் வழங்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம்.( படங்கள் )

திவிநெகும வேளைத்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட 'வாழ்வெளிச்சி' வேளைத்திட்டத்தினூடாக மன்னார் மாவட்டத்தில் சுய தொழில் முயற்சியில் ஈடுபட்ட இளைஞர்,யுவதிகளுக்கு வங்கிக்கடன் வழங்கும் முகமாக ஆலோசனைக்கூட்டம் ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை காலை மன்னார் நகர மண்டபத்தில் இடம் பெற்றது.

இதன் போது அமைச்சர்களான  றிசாட் பதீயுதின்,டக்லஸ் தேவானந்தா,பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக்,மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்; எம்.வை.எஸ்.தேசப்பிரிய,மேலதிக அரசாங்க அதிபர் ஸ்ரான்லி டி மேல்,அமைச்சரின் இணைப்பாளர் என்.எம்.முனவ்பர் ஆகியோர் அதிதிகலாக கலந்து கொண்டனர்.

இதன் போது மன்னார் மாவட்டத்தில் உள்ள அரச,தனியார் வங்கிகளின் முகாமையாளர்கள்,வங்கி பிரதி நிதிகள்,சுய தொழில் முயற்சியில் ஈடுபட்டு நூற்றக்கணக்காண இளைஞர் யுவதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

-இதன் போது குறித்த சுய தொழில் பயிற்சிகளில் ஈடுபட்ட இளைஞர்,யுவதிகள் வங்கிகளின் ஊடாக கடனை பெற்றுக்கொள்ளுவது தொடர்பான விளக்கங்களும் வழங்கப்பட்டது.









மன்னார் மாவட்டத்தில் சுய தொழில் முயற்சியில் ஈடுபட்டவர்களுக்கு வங்கி கடன் வழங்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம்.( படங்கள் ) Reviewed by NEWMANNAR on August 13, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.